பக்கம்:அறிவியல் வினா விடை-இயற்பியல்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15

பாலின் துய்மையை அளக்கும் கருவி.

20. பாஸ்கல் விதியைக் கூறு.

அசைவற்று இருக்கும் ஒரு நீர்மத்தில் ஒரு புள்ளியில் ஏற்படும் அழுத்தம், அதன் ஏனைய புள்ளிகளுக்கும் சமமாகப் பரவும்.

21. பாஸ்கல் விதியின் அடிப்படையில் அமைந்த கருவிகள் யாவை?

நீரியல் தடுப்பான், நீரியல் தூக்கி, நீரியல் அழுத்தி.

22. நீர்மூழ்கிக்கப்பல் எவ்வாறு இயங்குகிறது?

இதிலுள்ள நிறைத் தொட்டியில் நீர் நிரப்ப, நீரினுள் செல்லும். தொட்டி நீரில் இறுகிய காற்றைச் செலுத்த, அது மீண்டும் நீரில் மேல் வரும்.

23. நீர்மூழ்கிக் கப்பல்களின் பயன்கள் யாவை?

புலனாய்வுக்கும் கடலாராய்ச்சிக்கும் பயன்படுபவை.

24. பிளிம்சால் கோடுகள் என்றால் என்ன?

வாணிகப் பொருள்களை ஏற்றிவரும் பெருங் கப்பல்களின் பக்கங்களில் வரையப்பட்டிருக்கும் கோடுகள். கடல்நீர் அடர்த்தி, இடத்திற்கிடமும் தட்ப வெப்ப நிலைக்கு ஏற்பவும் மாறும் என்பதை இவை குறிப்பவை.

25. இழுமம் (ஜெல்) என்றால் என்ன?

இழுது போன்று திண்ம வடிவத்தில் இருக்கும் கூழ்மக் கரைசல், எ-டு. நெய்.

26. பால்மம் என்றால் என்ன?

ஒரு நீர்மத்தில் மற்றொரு நீர்மத்தின் கூழ்மத் துகள்கள் விரவி இருத்தல். எ-டு. பால்.

27. கூழ்மம் என்றால் என்ன?

கரைசல் அல்லது தொங்கலிலுள்ள பொருள். இதன் துகள்கள் பெரியவை. ஆகவே அவை கரிமப் படலத்தின் வழியாகச் செல்லா. எ-டு. கூழ்.

28. கூழ்மத்தை வரையறை செய்தவர் யார்? எப்பொழுது?

தாமஸ் கிரகாம். 1861இல் கூழ்மத்தை வரையறை செய்தார்.

29. கூழ்மமுள்ள இரு நிலைகள் யாவை?