பக்கம்:அறிவியல் வினா விடை-இயற்பியல்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

61



சில நிறங்களைப் பிற நிறங்களிலிருந்து பிரித்தறிய இயலாத நிலை. குறிப்பாகச் சிவப்பு, பச்சை நிறங்களைப் பிரித்தறிய முடியாத நிலை.

59. நிறப்பார்வை என்றால் என்ன?

வேறுபட்ட நிறங்களைப் பிரித்தறியும் கண்ணின் திறன்.

60. ஆக்பா நிறம் என்றால் என்ன?

மூவண்ணத்தைப் பயன்படுத்தும் நிறப் புகைப்படக்கலை.

61. இராமன் விளைவு என்றால் என்ன?

ஒர் ஊடகத்தின் வழியாக ஒற்றை நிற ஒளி செல்லும் பொழுது, அது தன் முதல் அலை நீளங்களாகவும் பெரிய அலை நீளங்களாகவும் (இராமன் வரிகள்) சிதறுதல்.

62. இராமன் விளைவின் பயன்கள் யாவை?

அடிப்படை ஆராய்ச்சியில் உலகெங்கும் பல துறைகளில் பயன்படுவது. காட்டாக, ஒரு நீர்மத்தின் மூலக்கூறு ஆற்றல் அளவை ஆராயப் பயன்படுவது.

63. இராமன் எந்த ஆண்டில் நோபல் பரிசு பெற்றார்? அதன் சிறப்பு என்ன?

1930இல் பெற்றார். நோபல் பரிசு பெற்ற முதல் இந்திய விஞ்ஞானி. அவர் பங்களிப்பும் அனைத்துலகத் தரத்திலுள்ள முதன்மையான பங்களிப்பு.

64. இந்திய அறிவியலின் தந்தை யார்?

சர். சி. வி. இராமன்.

65. நிறமானி என்றால் என்ன?

நிறங்களின் செறிவைப் பகுக்குங் கருவி.

66. மாறுநிலைக் கோணம் என்றால் என்ன?

அடர்மிகு ஊடகத்தில் எப்படுகோணத்திற்குச் சரியாகக் காற்றில் விலகுகோணம் 90o ஆகவிருக்கிறதோ அப்படு கோணம் அந்த ஊடகத்தின் மாறுநிலைக் கோணம். வைரத்தின் மாறுநிலைக் கோணம் 2.45o

67. முழு அகப் பிரதிபலித்தல் என்றால் என்ன?

படுகோணம் மாறுதானக்கோணத்தை விடப் பெரிதாக இருக்கும் பொழுது உண்டாகும் எதிரொளிப்பு.