பக்கம்:அறிவியல் வினா விடை-இயற்பியல்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64




86. கலிபோர்னியாவில் பலோமர் மலையிலுள்ள 200-அங்குல தொலைநோக்கி எப்பொழுது நாட்டுக்கு ஒப்படைக்கப்பட்டது?

1948இல் நாட்டுக்கு ஒப்படைக்கப்பட்டது.

87. தொலைநோக்கி அமைக்கும் முயற்சியைத் தொடங்கிய வர் யார்?

மூக்குக்கண்ணாடி செய்த டச்சுக்காரரான ஹேன்ஸ் லிபர்சே, 1608.

88. பிரதிபலிக்கும் தொலைநோக்கியைப் புனைந்தவர் யார்?

1668இல் நியூட்டன் புனைந்தார்.

89. எட்டப்பார்வை என்றால் என்ன?

விழிக்கோளம் சுருங்குவதால் அருகிலுள்ள பொருள்களில் இருந்து வரும் ஒளிக்குவியம் விழித்திரைக்குப் பின் விழுகிறது. இதனால் அருகிலுள்ள பொருள்களை மட்டுமே பார்க்க இயலும். இதைப் போக்கக் குவி வில்லையைப் பயன்படுத்த வேண்டும்.

90. கிட்டப்பார்வை என்றால் என்ன?

விழிக்கோளம் முன்னும் பின்னும் நீண்டு விடுவதால் தொலைபொருள்களிலிருந்து வரும் ஒளிக்குவியம் விழித் திரைக்கு முன் விழுகிறது. இதனால் தொலைவிலுள்ள பொருள்களைப் பார்க்க முடிவதில்லை.இதைப் போக்கக் குழிவில்லையைப் பயன்படுத்த வேண்டும்.

91. நிழல் என்றால் என்ன?

ஊடுருவாப் பொருள் ஒளியைத் தடுக்கும் பொழுது ஒரு பரப்பில் உண்டாகும் இருட்டு.

92. நிழலின் வகைகள் யாவை?

1. முழு நிழல் 2. அரை நிழல். கோள்மறைவில் இந்நிகழ்ச்சி உள்ளது.

93. குறுந்துளை என்றால் என்ன?

ஒளிக்கருவிகளில் ஒளியினை உள்விடுந் திறப்பு. எ-டு. ஒளிப்படப் பெட்டி, நுண்ணோக்கி.

94. துகள் கொள்கை என்றால் என்ன?

துகள்களாலனது ஒளி என்னுங் கொள்கை - நியூட்டன். அலைகளாலானது ஒளி என்பது மற்றொரு கொள்கை