பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42.

45.

44.

46.

47

க்

35

அதிகக் காரணிகள் கொண்ட எண்கள் பற்றி ஆராய்ந் தார். இவை நீளமானதும் முக்கியமானதும் ஆகும். சுழி பற்றிய வரலாறு யாது? %=1 என்பது உண்மையா என்பது இராமானுஜம் ஐயம். சிலர் சுழியைச் சுழியால் வகுத்தால் சுழியே கிடைக்கும் என்றனர். சிலர் 1 என்றனர். ஆனால் இந்தியக் கணித மேதை பாஸ்கரர் மட்டுமே, சுழியைச் சுழியால் வகுத்தால் கிடைப்பது முடிவிலி என்றார். இராமானுஜன் வாழ்வில் கனவின் சிறப்பென்ன? அவர் கனவில் அற்புதமான கணக்குகள் தோன்றும். அவற்றிற்குரிய முடிபுகளைக் கனவிலேயே போட்டு விடுவார். எழுந்தபின் அவற்றைத்தம் கற்பலகையில் குறித்துக் கொள்வார். இராமானுஜன் கணித அறிவைத் தூண்டிய நூல் எது? ஜி.எஸ்.கர் எழுதிய கணிதமாகும்.இந்நூலில் 6000 தேற்றங்கள் கொடுக்கப்பட்டிருந்தன. இவற்றை மாதிரிகளாகக் கொண்டு அவர் பல தேற்றங்களை உருவாக்கினார். அப்பொழுது அவருக்கு அகவை 15. இத்தேற்றங்கள் இன்றும் சிறப்புள்ளவை என்று கருதப்படுபவை. கணித மேதை பித்தாகரசுக்கும் இவருக்குமுள்ள ஒற்றுமை யாது? பித்தாகரசு தமக்குத் தோன்றும் கணித முடிவுகளைத் தரையில் எழுதி வைத்துப் பிறகு சோதித்துப் பார்ப்பார். அதே போல இராமனுஜன் தம் கணக்குகளைத் தரையிலும் கற்பலகையிலும் போட்டுப் பார்ப்பார். உணவு பரிமாறுபவரிடம் இராமானுஜம் போட்ட புதிர்க் கணக்கு யாது? x "ஒரு சதுர மேசையில் ஒரு பக்கத்திற்கு 4 பேர்கள் உட்கார்ந்து சாப்பிடுகிறார்கள். நீ எத்தனை பேருக்குப் பரிமாறுவாய்?" பரிமாறுபவர் உடன், "இது தெரியாதா?" 16 பேர்கள். இராமானுஜம். இல்லை 12 பேர்கள்தான். இராமானுஜனின் குடும்பத் தெய்வம் எது?