பக்கம்:அறிவியல் வினா விடை-தாவரவியல்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

21


29. நுண்ணிலை என்றால் என்ன?
ஒரு செழிப்பான இலை. கிளைக்காத ஒற்றை நரம்புள்ளது. அடியிலிருந்து முனைவரை செல்வது. எ-டு. குதிரைவாலிகள்.

30. அச்சு நோக்கிய என்பது எதைக் குறிக்கிறது?
இது இலையின் மேற்பரப்பைக் குறிக்கும்.

31. அச்சு விலகியது என்பது எதைக் குறிக்கிறது?
இது இலைக் கீழ்ப் பரப்பைக் குறிக்கும். இலை முதலிய பக்க உறுப்புகளில் இச்சொல் கீழ்ப்புறம் (வெண்ட்ரல்) என்று பொருள்படும்.

32. இளம் அரும்பு என்றால் என்ன?
இளம் தாவர இலைகளையும் பூக்களையும் கொண்ட மொட்டு.

33. ஊசியிலை வடிவம் என்றால் என்ன?
இலை நீண்டும் குறுகியும் உருண்டையாகவும் இருத்தல். எ-டு. பைன்மர இலை.

34. இலைக்கோணம் என்றால் என்ன?
தண்டில் தண்டுக்கும் இலைக்கும் இடையிலுள்ள கோணம். இதில் கோணக் குருத்துள்ளது.

35. இலைச்சுருளமைவு என்றால் என்ன?
இளமையாக இருக்கும் பொழுது, இதில் முழுக் கூட்டிலையும் கடிகாரச் சுருள் போன்று வளைந்திருக்கும். எ-டு. பெரணி.

36. விதையிலை என்றால் என்ன?
விதைத் தாவர முளைக் கருவின் முதல் இலை. முளைக்கும் விதைக்கு உணவளிப்பது. மாவிதையில் இரண்டும் நெல்லில் ஒரு விதையிலையும் இருக்கும்.

37. வகைப்பாட்டில் இதன் சிறப்பு யாது?
இதைக் கொண்டு தாவரங்கள் இரு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. 1. இரு விதையிலைத் தாவரங்கள் - மா, பலா. 2. ஒரு விதையிலைத் தாவரங்கள் - தென்னை, பனை.

38. தழைப்பிலைகள் என்பவை யாவை?