பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

151 இதன் கால எல்லை என்ன? 1957 ஜூன் 30 ஆம் நாள் நள்ளிரவிலிருந்து தொடங்கி 1958 டிசம்பர் 31 ஆம் நாள் இரவோடு முடிவடைந்தது. புவி இயற்பியல் ஆண்டின் கண்டுபிடிப்புகள் யாவை? 1. புவியின் காந்த நடுக்கோட்டைச் சுற்றி மிகப் பரந்த மின்னோட்டம் ஒன்றுள்ளது. 2. பசிபிக் பெருங்கடலில் இரண்டு ஒட்டங்களும் அட் லாண்டிக் பெருங்கடலில் ஓர் ஒட்டமும் உள்ளன. 3. முனை ஒளிகள் ஒரே சமயத்தில் தோன்றுகின்றன. 4. பசிபிக் பெருங்கடலில் பரந்ததும் சிறந்ததுமான கனி வளப்பகுதி ஒன்றுள்ளது. 5. புவிக் கடியில் 70 கடல்கள் உள்ளன. இவற்றின் நீர் குடிப்பதற்கு ஏற்றது. 6. புவிமேற்பரப்பு கடல் தரையின் நெடுக 45,000 மைல் அளவுக்கு வெடித்துள்ளது. 7. விண்கதிர்கள் புவி நேர்க்கோட்டிற்கேற்ப மாறுபடு கின்றன. இவற்றின் நடுக்கோடு 45'அளவுக்கு மேற்காகச் சாய்ந்துள்ளது. இதனால் வானவெளியிலுள்ள மற்றக் காந்தப் புலங்கள்ால் அலைக்கழிக்கப்டுகிறது. 8. வானவெளியில் பரந்த காந்த மண்டலங்கள் உள்ளன. ஐகுயுஎஸ்ஒய் என்றால் என்ன? அனைத்துலக அமைதிக்கதிரவன் ஆண்டு என்பது இதன் Gurrogir (Intemational Quiet Sunyear, ICSY), of 21soar; துலக அறிவியல் திட்டம். 1964-1965 இல் நிறைவேறியது. எப்பொழுது இத்திட்டம் எடுத்துக் கொள்ளப்பட்டது? கதிரவன் செயல்கள் மிகக் குறைவாக இருக்கும் பொழுது எடுத்துக் கொள்ளப்பட்டது. அதாவது, அது அமைதி யாக இருக்கும் நிலையில். இத்திட்டத்தின் நோக்கம்? புவி இயற்பியல் நிகழ்ச்சிகளில் கதிரவன் செல்வாக்கு என்ன என்பதை அறிவது. ஆராயப்பட்ட துறைகள் யாவை? கதிரவன் செயல், அயனவெளி, புவிக்காந்தம், விண்கதிர்