பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. 15. 16. 17. 18. –22 கூறுகின்றார். இவர் கருத்துகள் முழுதும் சரியில்லை என்றாலும் புவியமைப்பியல் சிந்தனைகள் மேலும் உருவாகத் தூண்டின. இவர் கூறிய கருத்துகளில் இரண்டு இங்குக் கருதத்தக்கது. 1. கதிரவனுடன் வால்மீன் மோதிய பொழுது, தெறித்து விழுந்த துண்டே புவியாக மாறியது. 2. புவியின் வயது 100,000 ஆண்டுகள். தற்காலப் புவியமைப்பியலுக்கு வித்திட்டவர் யார்? ஸ்காட் புவி அமைப்பியலார் சார்லஸ் லையல் (1797 - 1875). புவியை அறியவும் அதைப் பற்றிய மனித வரலாற்றை அறியவும் அவர் கூறிய கருத்துகள் புவியமைப்பியலாகும். உயிரியலாருக்கும் பெரிதும் துணை புரிந்தன. இவர் ஒருசீர் கொள்கையை உருவாக் கியவர். இவர் 1830 இல் புவியமைப்பியலின் நெறிமுறைகள் என்னும் நூலை பெளியிட்டார். 18ஆம் நூற்றாண்டின் சிறந்த புவியமைப்பியலார் யார்? ஆப்ரகாம் காட்லாப் வெர்னர் (1750 - 1817). இவர் முன்மொழிந்த கொள்கை நீர்வழிக் கொள்கை (Neptunism) கடல் நீரிலிருந்த பாறைகளிலிருந்து புவி தோன்றின என்றார். இவர் புவியமைப்பியலை ஒர் அறிவியலாகக் கருதினார். இவர் சிறந்த ஜெர்மன் புவி அமைப்பியலார். 18 ஆம் நூற்றாண்டில் வாதிடப்பட்ட இரு கொள்கைகள் யாவை? 1. நீர் வழிக் கொள்கை - வெர்னர். 2. பாறைவழிக் கொள்கை - ஹட்டன். மாமாற்றப் புவி அமைப்பியல் என்றால் என்ன? புவியமைப்பியலில் இது ஒரு விசைக் கொள்கை. புவியின் அமைப்பு இயல்புகள் மாமாற்ற நிகழ்ச்சிகள் ஆகும். இவை வெள்ளங்கள், நிலநடுக்கங்கள், எரிமலை கள் ஆகியவை ஆகும். இக்கொள்கையை வகுத்தவர் குவியர். ஒருசீர் புவி அமைப்பியல் என்றால் என்ன? புவி அமைப்பியலில் இது ஒரு வகைக் கொள்கை.