பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. 11. 12. 13. 14. 15. 16. 31 கோள்கள் ஒன்பது யாவை? புதன், வியாழன், வெள்ளி, புவி, செவ்வாய், சனி, யுரேனஸ், நெப்டியூன், புளுட்டோ. புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட இரு கோள்கள் யாவை? ஸ்மைலி, கர்லா. புவி மைய விண்ணகம் என்றால் என்ன? புவியை மையமாகக் கொண்ட உலகம் என்னும் தாலமி கருத்து. கதிரவன் மைய விண்ணகம் என்றால் என்ன? கதிரவனை மையமாகக் கொண்ட விண்ணகம். இதுவே அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்து. தாலமி கருத்துக்கு மாற்றான கோப்பர்னிகஸ் கருத்து. கதிரவன் குடும்பம் எவ்வாறு தோன்றியது? கதிரவனும் அதன் கோள்களும் வானவெளியில் சுற்றிக் கொண்டிருந்த வளி முகில், தூசி ஆகிய இரண்டிலிருந்தும் தோன்றின. முகில் ஈர்ப்பினால் ஒன்றாக இழுக்கப்படவே அது தடித்தது. முகிலின் பெரும் பகுதி கதிரவன் ஆயிற்று. எஞ்சியது கோள்கள், திங்கள்கள், சிறுகோள்கள் ஆயின. விண்ணகத் தோற்றக் கொள்கைகள் யாவை? 1. பெரு வெடிப்புக் கொள்கை. 2. நிலைப்பு நிலைக் கொள்கை. பெருவெடிப்புக் கொள்கையை உருவாக்கியவர் யார்? இக் கொள்கையை முதன் முதலில் 1927இல் லெமாய்டர் என்பவரால் உருவாக்கப்பட்டது. இக்கொள்கையைத் திருத்தி அமைத்தவர் யார்? 1946இல் ஜார்ஜ் கேமோ திருத்தியமைத்தார். இக்கொள்கை கூறுவது யாது? விண்ணகத் தோற்றக் கொள்கைகளுள் ஒன்று. விண்ணகத்திலுள்ள எல்லாப் பொருள்களும் tஅடர்த்தியுள்ள திரட்சி வெடித்ததலிருந்து தோன்றின. இதில் புவி முதலிய கோள்களும் அடங்கும். நிலைப்பு நிலைக் கொள்கை கூறுவது யாது? விண்ணகம் எப்பொழுதும் நிலைப்பு நிலையில் உள்ளது.