பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 இரவு பகல் ஏற்படுவதேன்? கதிரவனைச் சுற்றிப் புவி வலம் வருகிறது. தன் அச்சைச் சுற்றியும் சுழல்கிறது. நாம் இருக்கும் புவியின் பகுதி கதிரவனை நோக்கும்பொழுது பகல்; அதைவிட்டு விலகும் பொழுது இரவு. சம இராப்பகல் நாட்கள் என்றால் என்ன? ஒரு சாய்வச்சில் புவி தன்னைத்தானே சுற்றிக்கொண்டு கதிரவனையும் சுற்றி வரும்பொழுது, கதிரவன் கடகக் கோட்டுக்கும் மகரக் கோட்டுக்கும் இடையே ஆண்டுக் கொரு முறை வருகிறது. இக்காலத்தில் இது நிலநடுக் கோட்டை இருமுறை கடக்குகிறது. மார்ச் 20-21 மற்றும் செப்டம்பர் 22- 23 ஆகிய நாட்களில் கதிரவன் நிலநடுக் கோட்டிற்கு மேல் செங்குத்தாகக் காணப்படும். இந் நாட்களில் புவியின் இரவு மற்றும் பகற்பொழுது சமமாக இருக்கும். இந்நாட்களைச் சம இராப்பகல் நாட்கள் & Toro int. கதிரவன் நிற்றல் என்றால் என்ன? சம இராப்பகல் நாட்களுக்கிடையே அமைந்த கதிரவன் வட்ட நடுவழியிலுள்ள இரு புள்ளிகளில் ஒன்று. இதன் வகைகள் யாவை? 1. விண் நடுக்கோட்டில் வடக்கே கதிரவன் அதிகத் தொலையில் இருப்பதற்குக் கோடைக் கதிரவன் நிற்றல். 2. தெற்கே இருப்பதற்கு மாரிக் கதிரவன் நிற்றல் என்றும் பெயர். ஆண்டின் வகைகள் யாவை? 1. திங்களாண்டு - 12 மாதங்களுக்குரியது 2. கதிரவன் ஆண்டு 365.24219 சராசரி கதிரவன் நாட்கள். 3. விண்மீன் ஆண்டு 365.25636 சராசரி கதிரவன் நாட்கள். மூவகை நேரங்கள் யாவை? 1. உள்ளுர் நேரம் 2. திட்ட நேரம் 3. கிரீன்விச்சு நேரம் உள்ளுர் நேரம் என்றால் என்ன? மைய வரையைக் கதிரவன் கடக்கும் பொழுது அளக்கப்படும் ஒரிடத்தின் நேரம். இது இடத்திற்கிடம்