பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44. 45. 46. 47. 48. 49. 50. 51. 45 செய்தித்தாள்கள் படத்துடன் வானிலை முன்னறிவிப் பைத் தெரிவிக்கின்றன. அதேபோல், தொலைக்காட்சி களும் தனியே நாளைய வானிலை என்னும் தலைப்பில் இரவுச் செய்தி வாசிப்பில் தெரிவிக்கின்றன. புயல் என்றால் என்ன? முகில் மற்றும் மழையை உருவாக்கிய வண்ணம் சூறைக் காற்றைச் சுழியிட்டுச் செல்லும் குறையழுத்தப் பகுதி. புயல் வழியறிதல் என்றர் என்ன? திரட்டிய வானிலைச் செய்திகளைக் கொண்டு புயல் எவ்வாறு உருவாகி மேல் நகர்ந்து செல்லும் என்பதை அறிந்து, அதன் அழிவுச் செயலை அறிவித்தல். இதற்குத் தற்காலத்தில் பெரிதும் பயன்படுபவை யாவை? வானிலை நிலாக்கள். தமிழ்நாட்டுக்குப் புயல் மாதங்கள் யாவை? நவம்பர் மாதம். பெரும்புயல் என்றால் என்ன? வெப்பமண்டலச் சூறைக் காற்று. உலகின் கதகதப்பான பகுதிகளில் ஏற்படும் வலுவான புயல். கதகதப்பாக இருக்கும் பொழுது, நிலநடுக்கோட்டுக்கு அருகில் தொடங்குகின்றது. கடலுக்கு மேலுள்ள ஈரக்காற்று மேல் எழும்புகிறது. அதிக நீராவியுள்ள பெரும் முகில் கம்பங்களைத் தோற்றுவிக்கும். மேல் எழும் கதகதப்பான காற்றுக்குக்கீழ்க் குளிர் காற்று வருகிறது. இது ஒரு மணிக்கு 300 கி.மீ. அளவுக்குச் சுழன்று அடித்துக் கரையை அடைந்து பெரும் சேதத்தை விளைவிக்கும். முகில்கள் என்பவை யாவை? உயர்மட்டத்தில் தோன்றும் மூடுபனி. முகில்களின் வேலைகள் என்ன? 1. காற்று வெளியில் உண்டாகும் நிகழ்ச்சிகளை விளக்குபவை. 2. நடப்பிலிருக்கும் வானிலை நிலைமைகளை எடுத்துக்காட்டுபவை. முகில்களின் வகைகள் யாவை?