பக்கம்:அறிவியல் வினா விடை-மருத்துவம்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

107


ஒர் உளமருத்துவரின் கீழ் வேலை செய்பவர். உள நோயாளிகளுக்கு மறுவாழ்வு அளிக்க உதவுபவர்.


18.செயற்கொள்கை என்றால் என்ன?

நனவு நிலையினின்று எழும் விளைவுகளே உளவியல் ஆராய்ச்சிக்குரிய பொருள்கள் ஆகும் என்னும் கொள்கை.


19.ஆளுமை என்றால் என்ன?

ஒருவன் உளப்பான்மைகளும் இயல்புகளும் அடங்கிய தொகுப்பு. இதை உள்ள அமைப்பின் தொகு மொத்தம் எனலாம். இது ஆளுக்கு ஆள் வேறுபடுவது.


20.ஆளுமை வடிவுரு என்றால் என்ன?

பல ஆளுமைப் பண்புகளில் ஒருவரின் நிலைகளைத் தொகுத்துக் காட்டும் படம்.


21.தனியாளுமை என்றால் என்ன?

இது உள்ளம், ஆளுமை, பண்பு முதலியவற்றில் வெளிப்படுவது. ஐன்ஸ்டின் தனியாளுமை சமூகத்திற்குப் பயனளித்துள்ளது. இட்லரின் தனியாளுமை சமூகக் கேட்டை விளைவித்தது.


22. வெளிப்பாடு என்றால் என்ன?

எண்ணங்கள், கருத்துகள், உணர்ச்சிகள் ஆகியவற்றிலிருந்து விடுபட அவற்றைப் பிறருக்கு மாற்றுதல். எ-டு தன் பழியைப் பிறர் மீது சுமத்துதல்.


23. வெளிப்பாட்டுக் குறை என்றால் என்ன?

எழுத்தில் சொற்களை அமைத்துக் கருத்துக்களைத் தெரிக்க இயலாமை.


24.வெளிப்பாட்டு நுணுக்கள் என்றால் என்ன?

மைத் தடங்கள், படங்கள், வடிவங்கள் முதலியவற்றைப் பயன்படுத்தி ஆளுமையை ஆராயும் முறைகள். இம்முறைகளில் பயன்படுவனவற்றைத் தத்தம் ஆளுமைப் பண்புகளுக்கேற்ப ஒவ்வொருவரும் பொருள் கொள்வர்.


25.மறத்தல் என்றால் என்ன?

கற்றவை நினைவிலிருந்து நீங்குவதைக் குறிக்கும். மறப்பது உள்ளத்தின் இயல்பு. நல்ல சூழ்நிலைகளில்