பக்கம்:அறிவியல் வினா விடை-மருத்துவம்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124



கேசர் ஆகிய இருவரும் பெற்றனர்.

39. பெனிசிலின் கண்டுபிடிப்பு அதன் நோய்க் குணப்படும் மதிப்பு அறிதல் ஆகியவற்றிற்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?

1945 இல் அலெக்சாண்டர் பிளம்மிங், சர் எர்ன்ஸ்ட் போரிஸ் செயின், கோமகன் ஹாவார்டு வால்டர் புளோரி ஆகிய மூவரும் பெற்றனர்.

40. எக்ஸ் கதிர்கள் மூலம் சடுதி மாற்றங்களை உண்டாக்குவதைக் கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?

1946 இல் ஹெர்மன் ஜோசப் முல்லர் பெற்றார்.

41. கிளைகோஜன் வினையூக்கத்தைக் கண்டு பிடித்ததற்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?

1947 இல் கார்ல் பெர்டினாண்ட் கோரி, கெர்டி தெரசாகோரி ஆகிய இருவரும் பெற்றனர்.

42. சர்க்கரை வளர்சிதை மாற்றத்தில் மூளையடிச் சுரப்பியின் முன்பகுதி செய்யும் வேலையைக் கண்டுபிடித்த தற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?

1947 இல் எர்னார்டோ ஆல்பர்டோ களெசே பெற்றார்.

43. பல பூச்சிகளுக்கு எதிராக ஒரு தொடு நச்சாக அமைந்து உயர் விளைவு உண்டாக்கும் DDT பற்றிக் கண்டுபிடித்த தற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?

1948 இல் பால் ஹெர்மன் முல்லர் பெற்றார்.

44. நடுமூளை ஆராய்ச்சிக் கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?

1949 இல் வால்டர் ருடால்ப் ஹெஸ் பெற்றார்.

45. சில உளக் கோளாறுகளில் வெள்ளணு நீக்கத்தால் ஏற்படும் பண்டுவ மதிப்பைக் கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?

1949 இல் அந்தோணி சீடனோ டி அப்ரு பிரய்ரி எகாஸ் மோனிஸ் பெற்றார்.

46. அண்ணீரகச் சுரப்பித் தூண்டிகள் தொடர்பான கண்டுபிடிப்பு