பக்கம்:அறிவியல் வினா விடை-மருத்துவம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12. சித்தர்கள் கொள்கை நாட்டிலே பரவுவதால் ஏற்படும் பெருநன்மை யாது?

மக்களிடயே அன்பும் ஒற்றுமையும் வளரும்.

13. சித்த மருத்துவ நூல்கள் எத்தகைய மொழியில் உள்ளன?

மக்கள் பேசும் தமிழ் மொழியில் உள்ளன.

14. ஆயுர் வேதத்திலிருந்து சித்த மருத்துவம் பிறந்ததா?

இல்லை. சித்த மருத்துவர்கள் இதை மறுப்பர். மாறாக, சித்த மருத்துவத்திலிருந்துதான் ஆயுர் வேதம் தோன்றிற்று என்பர். தவிர, ஆயுர் வேதத்தில் இல்லாத தனிக் கூறுகள் சித்த மருத்துவத்தில் உண்டு.

15. புகழ் பெற்றவரும் காலஞ் சென்றவருமான ஆயுர் வேத வைத்தியர் பண்டிட் டி கோபாலாச்சார்லு ஓர் ஆயுர் வேத மாநாட்டில் முடிவாகப் பேசியது என்ன?

ஆயுர் வேதமுறைகளை பார்க்கிலும் அகத்திய வைத்தியமுறை (சித்த மருத்துவ முறை) அநேக விதத்தில் வேறு பட்டதாகவே உள்ளது. அகத்திய வைத்திய சம்பந்தமான நூல்களில் உள்ள பரிபாஷைச் சொற்கள் (கலைச் சொற்கள்) வடமொழி நூல்களில் காணப்படாமல் இருப்பதே இதற்குப் போதுமான பிரமாணமாகும்.

16. இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்குழுமுன் சீகாழி வைத்தியர் சி.எஸ். நாராயணசாமி அய்யர் கூறியது யாது?

பல சித்தர்களால் ஏற்பட்ட ரசாயன சாஸ்திரங்களே ஆயுர் வேதமாகும். இவைகள் குகைகளில் வைக்கப் பட்டிருந்தன. தவிரச் சரக்குகளைக் கட்டும் வகை ஆயுர் வேதத்தில் கிடையாது.

17. இரசவாதம் என்றால் என்ன? இதில் வல்லவர்கள் யார்?

இரும்பைப் பொன்னாக்கல் இரசவாதம் ஆகும். இதில் வல்லவர்கள் சித்தர்கள். இவர்கள் இரசவாதிகள். இரசவாதமே பின் இரசாயனமாயிற்று.

18. நீண்ட நாள் வாழ்வது எவ்வாறு என்று சித்தர்கள் கூறுகிறார்கள்?

சித்தர்கள் கொள்கை மக்கள் சாகாமல் வாழலாம் என்பதே. இதற்கான பயிற்சியும் காயகல்பம் என்னும்