பக்கம்:அறிவியல் வினா விடை-விலங்கியல்.pdf/110

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
108

24. இடம்பெயர் இயக்கம் என்றால் என்ன?

விலங்குகள் ஒரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்குச் செல்லுதல். இச்சிறப்பியல்பு தாவரங்களுக்கில்லை.

25. தூண்டல் இயக்கம் என்றால் என்ன?

ஓர் உயிரி அல்லது உயிரணு தூண்டல்நோக்கி நகர்வது. தூண்டல் செறிவைப் பொறுத்தது இயக்கம். காட்டாக, மரப்பேன். ஈரச்சூழலில் மெதுவாகவும், உலர்சூழலில் விரைவாகவும் செல்லும்.

26. கோடை உறக்கம் என்றால் என்ன?

இது கோடையில் தாவரத்திலும் விலங்கிலும் உண்டாவது. எ-டு. பாம்பு, மீன், கரடி.

27. காட்டுவிலங்குப் பாதுகாப்பு என்றால் என்ன?

காடுகளில் வாழ்பவை காட்டுவிலங்குகள். மனிதன் தன்வசதிக்காகவும் வாழ்வு நலத்திற்காகவும் மேற்கொள் ளும் செயற்கை முறைகளால் இவை கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகின்றன. இன்று அவ்வாறு அழியாமலிருக்க மேற்கொள்ளப்படும் தடுப்பு முயற்சியே காட்டுவிலங்குப் பாதுகாப்பாகும். புலி, சிங்கம், மான், பறவை முதலிய 500க்கு மேற்பட்ட காட்டு விலங்குகள் இந்தியாவில் உள்ளன. இவற்றைக் காப்பதற்கென்று பல இடங்களில் புகலிடங்களும் பூங்காக்களும் உள்ளன. தமிழ்நாட்டில் முதுமலை, முண்டந்துறை, வேடந்தாங்கல் முதலிய இடங்களில் புகலிடங்கள் உள்ளன.

28. சமப்பல்லுருத் தோற்றம் என்றால் என்ன?

உயிர்த்தொகைகளில் இரண்டிற்கு மேற்பட்ட வகைகள் இயற்கைத் தேர்வினால் சமநிலையுடன் இருத்தல். இதனைப் பூச்சிவகைகளில் காணலாம்.

29. நேர்நிலை என்றால் என்ன?

இது உடலின் இருக்கை நிலையைக் குறிக்கும். இதனைக் காப்பது இயக்குத்தசைகள். நிற்றல், நடத்தல், ஒடுதல் முதலிய எல்லா நிலைகளும் இத்தசைகளால் கட்டுப் படுத்தப்படுகின்றன. எடுப்பான தோற்றத்திற்கு இத்தசைகளே காரணம்.