பக்கம்:அறிவியல் வினா விடை-விலங்கியல்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
109

30. பரிமாற்ற வாழ்வு என்றால் என்ன?

இது விலங்குகளுக்கிடையே நிலவும் ஒருவகை உறவு. இதில் வலிய உயிரி எளிய உயிரியை அழித்தலாலும், அச்செயல் பொறுத்துக் கொள்ளப்படுவது.எ-டு. எருமைத் தோலிலுள்ள ஒட்டுண்ணிகளைக் காகம் உண்ணல்.

31. வேற்றின இணைவாழ்வு என்றால் என்ன?

வேறுபட்ட வகைகளைச் சார்ந்த இரு விலங்குகள் ஒரு சேர வாழ்தல். இச்செயல் ஒன்றுக்கு நன்மை. மற்றொன் றுக்கு ஏற்போ இழப்போ இல்லை எ-டு. துறவி நண்டின் ஒட்டில் கடலனிமோன் இணைந்து வாழ்தல்.

32. சமச்சீர் என்றால் என்ன?

தாவரப்பூவும் விலங்குடலும் ஒரு தளத்தில் அமைந்திருக்கும் முறை.

33. இதன் வகைகள் யாவை?

1. இருபக்கச் சமச்சீர் - மீன்.
2. ஆரச்சமச்சீர் - நட்சத்திர மீன்.

34. ஆரச்சமச்சீர் என்றால் என்ன?

ஒரு பொதுமையத்தைச் சுற்றியமைந்துள்ள ஒத்த பகுதிகளை எச்செங்குத்துக்கோட்டில் வெட்டினாலும், அவற்றை இரு சமபகுதிகளாகப் பிரிக்கலாம். எ-டு. நட்சத்திரமீன்.

35. ஆரச்சமச்சீரிகள் என்றால் என்ன?

ஆரச்சமச்சீருடைய விலங்குகள். எ-டு குழிக் குடலிகள், முட்தோலிகள்.

36. ஆரம் விலகியது என்றால் என்ன?

ஆரச்சமச்சீருடைய வாய்க்கு எதிரே உடல் மேற்பரப்பு அமைதலைக் குறிப்பது.

37. புவிவளரியல் ஊழிகள் யாவை?

1. புத்துழி - 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்டது.
:2. இடையூழி - 65-225 மில்லியன் ஆண்டுகள்.
3. தொல்லூழி - 570 - 225 மில்லியன் ஆண்டுகள்.
4. முன்தொல்லுழி - 4600 - 2500 மில்லியன் ஆண்டுகள்.

38. கேம்பிரியன் ஊழி என்றால் என்ன?