பக்கம்:அறிவியல் வினா விடை-விலங்கியல்.pdf/111

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
109

30. பரிமாற்ற வாழ்வு என்றால் என்ன?

இது விலங்குகளுக்கிடையே நிலவும் ஒருவகை உறவு. இதில் வலிய உயிரி எளிய உயிரியை அழித்தலாலும், அச்செயல் பொறுத்துக் கொள்ளப்படுவது.எ-டு. எருமைத் தோலிலுள்ள ஒட்டுண்ணிகளைக் காகம் உண்ணல்.

31. வேற்றின இணைவாழ்வு என்றால் என்ன?

வேறுபட்ட வகைகளைச் சார்ந்த இரு விலங்குகள் ஒரு சேர வாழ்தல். இச்செயல் ஒன்றுக்கு நன்மை. மற்றொன் றுக்கு ஏற்போ இழப்போ இல்லை எ-டு. துறவி நண்டின் ஒட்டில் கடலனிமோன் இணைந்து வாழ்தல்.

32. சமச்சீர் என்றால் என்ன?

தாவரப்பூவும் விலங்குடலும் ஒரு தளத்தில் அமைந்திருக்கும் முறை.

33. இதன் வகைகள் யாவை?

1. இருபக்கச் சமச்சீர் - மீன்.
2. ஆரச்சமச்சீர் - நட்சத்திர மீன்.

34. ஆரச்சமச்சீர் என்றால் என்ன?

ஒரு பொதுமையத்தைச் சுற்றியமைந்துள்ள ஒத்த பகுதிகளை எச்செங்குத்துக்கோட்டில் வெட்டினாலும், அவற்றை இரு சமபகுதிகளாகப் பிரிக்கலாம். எ-டு. நட்சத்திரமீன்.

35. ஆரச்சமச்சீரிகள் என்றால் என்ன?

ஆரச்சமச்சீருடைய விலங்குகள். எ-டு குழிக் குடலிகள், முட்தோலிகள்.

36. ஆரம் விலகியது என்றால் என்ன?

ஆரச்சமச்சீருடைய வாய்க்கு எதிரே உடல் மேற்பரப்பு அமைதலைக் குறிப்பது.

37. புவிவளரியல் ஊழிகள் யாவை?

1. புத்துழி - 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்டது.
:2. இடையூழி - 65-225 மில்லியன் ஆண்டுகள்.
3. தொல்லூழி - 570 - 225 மில்லியன் ஆண்டுகள்.
4. முன்தொல்லுழி - 4600 - 2500 மில்லியன் ஆண்டுகள்.

38. கேம்பிரியன் ஊழி என்றால் என்ன?