பக்கம்:அறிவியல் வினா விடை-விலங்கியல்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

115


70% அளவு கிடைக்கிறது.

9. விலங்குப் புரதம் எந்த அளவு கிடைக்கிறது?

30% அளவு கிடைக்கிறது.

10. கால்நடை மருத்துவம் என்றால் என்ன?

வீட்டு விலங்குகளிடத்தும் காட்டு விலங்குகளிடத்தும் நோய்கள் உண்டாதலை ஆராய்தல், தடுத்தல், பண்டுவம் செய்தல் ஆகியவற்றை உள்ளடக்கியது.

11. கால்நடை நோய்களால் ஏற்படும் தீமைகள் யாவை?

1. உணவு உற்பத்தி குறைதல்.
2. நோய்கண்ட விலங்குகளைப் பயன்படுத்த முடியாது.
3. ஒட்டண்ணி நோயால் பாதிக்கப்பட்ட ஆடுகளின் கம்பளம் மட்டமாக இருக்கும்.
4. கோமாரி ஏற்படும் பசுக்கள் பால் குறைவாய்த்தரும்.
5. நோய்களைக் குணப்படுத்தும் செலவுகள் அதிகமாவதால், இறைச்சியின் விலையும் அதிகமாகிறது.
6. சூழ்நிலைக் காரணிகளால் விலங்கு நோய்கள் மனிதருக்குப் பரவக் கூடும். எ-டு சால்மோனெல்லா.

12. செயற்கை விந்நேற்றம் எப்பொழுது நடைமுறைக்கு வந்தது?

1930 களில் நடைமுறைக்கு வந்தது.

13. மிகச்சிறந்த பெருக்கும் நுணுக்கமாகக் கருதப்படுவது எது?

வணிகச் சிறப்புள்ளதும் பயனுள்ளதுமான விலங்குகளை, உரிய வழியில் மரபணுக்களைக் கையாண்டு உற்பத்தி செய்தல்.

14. விலங்கு நோய் என்றால் என்ன?

ஒட்டுண்ணிகளில் ஏற்படும் நோய். மனிதருக்கும் பரவக் கூடியது. எ-டு நாய்க்கடி

15. எத்தனை விலங்கு நோய்கள் உள்ளன?

100 க்கு மேற்பட்ட விலங்கு நோய்கள் உள்ளன.

16. ஆங்கில மருத்துவர் எட்வர்டு ஜென்னர் (1749 - 1823) கண்டறிந்த உண்மை யாது?

பால் பண்ணையில் வேலை செய்பவர்களுக்கு மாட்டம்மை (கோமாரி) வார்க்கிறது. இதற்குப் பின்