பக்கம்:அறிவியல் வினா விடை-விலங்கியல்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128


78. பெருமூலக்கூறுகளின் ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?

பால் ஜே. புஸோரே 1994இல் நோபல் பரிசு பெற்றார்.

79. தொடக்கக் கருவளர்ச்சியின் மரபுக் கட்டுப்பாட்டை அறிந்ததற்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?

வோல்கார்டு, டாக்டர் கிறிஸ்டியானி லூயிஸ், வீசக்ஸ் ஆகிய மூவரும் 1995இல் நோபல் பரிசு பெற்றனர். இவர்களில் கிறிஸ்டியாணி நோபல் பரிசு பெற்ற பத்து மகளிரில் ஒருவர்.

80. கருவளர்ச்சி மரபணுக் கட்டப்பாடு குறித்து ஆராய்ந்ததற்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?

எட்வர்டு பி. லூயிஸ், வோல்கார்டு, வீசக்சு ஆகிய மூவரும் 1995இல் நோபல் பரிசு பெற்றனர்.

81. உயிரணுவழி அமையும் தடுப்புப் பாதுகாப்பைக் கண்டறிந்ததற்காக நோபல் பரிசுபெற்றவர் யார்?

பீட்டர் டோகெர்டி 1996இல் நோபல் பரிசு பெற்றார்.

82. நோய்த் தடுப்பாற்றல் கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?

சிங்கர்னாஜெல், டெகார்டி ஆகிய இருவ்ரும் 1996இல் நோபல் பரிசு பெற்றனர்.

83. நொதிகளின் மூலக்கூறு தன்மையை ஆராய்ந்ததற்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?

வாக்கர், பாயர் ஆகிய இருவரும் 1997இல் நோபல் பரிசு பெற்றனர்.

84. புரதங்களின் உள்ளார்ந்த குறிகாட்டு இயல்பு ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?

டாக்டர் குன்டர் புளோபல் 1999இல் நோபல் பரிசு பெற்றார்.

85. நரம்பு மண்டலக் குறிபாட்டு ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்ற மூவர் யார்?

பால் கிரின்லாண்ட், கார்ல்சன், கண்டல் ஆகிய மூவரும் 2000இல் நோபல் பரிசு பெற்றனர்.

86. கண்ணறை ஆராய்ச்சிக்காக நோபல் பரிசுபெற்ற மூவர் யார்?

லீலேண்ட் ஹார்ட்வெல், டிமோதி, பால் நர்ஸ் ஆகிய மூவரும் 2001இல் நோபல் பரிசு பெற்றனர்.