பக்கம்:அறிவியல் வினா விடை-விலங்கியல்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24


29. இறால் என்பது யாது?

சிறிய நண்டுவகை விலங்கு. கடலில் வாழ்வது உண்ணக்கூடியது.

30. இறால் வளர்ப்பு என்றால் என்ன?

உணவுச் சிறப்புக்கருதி இறால்கள் நன்னீர் வயல்களில் வளர்க்கப்படுகின்றன. ஒவ்வொரு ஹெக்டேர் நிலத்திலும் 500-2000 கிகி இறால் கிடைக்கிறது. ஜப்பானில் ஒரு ஹெக்டேருக்கு 6000 கிகி இறால் கிடைக்கிறது.

31. ஆளி என்பது யாது?

இருதிறப்பு ஓட்டு மெல்லுடலி. இதில் முத்து உண்டாகிறது.

32. எண்காலி என்றால் என்ன?

எட்டுக்கால்களைக் கொண்ட மெல்லுடலி. கைநீட்சிகளின் உட்பரப்பில் ஒட்டுறிஞ்சிகள் உண்டு. எ-டு அக்டோபஸ்.

33. கனுக்காலிகள் என்றால் என்ன?

விலங்குலகின் பெருந்தொகுதி, கரப்பான்.

34. கணுக்காலிகளின் சிறப்பியல்புகள் யாவை?

1. புற எலும்புக் கூடு உண்டு.
2. கால்கள் கணுக்களில் இணைக்கப்பட்டிருக்கும். இவை ஒவ்வொரு கண்டத்திலும் இருக்கும்.
3. உடற்குழி சிறியது.
4. நக உயிரிகளில் மட்டுமே குற்றிழைகள் உண்டு.

35. கணுக்காலிகளின் வகுப்புகள் யாவை?

1. நகத்தாங்கிகள் - கரப்பான்
2. தோட்டுயிரிகள் - நண்டு
3. பலகாலிகள் - பூரான்
4. சிலந்தியங்கள் - சிலந்தி

36. பூச்சி என்பது யாது?

இது கணுக்காலி. தலை, மார்பு, வயிறு என உடல் பிரிந்திருக்கும். எ-டு கரப்பான்.

37. பூச்சிக்கொல்லி என்றால் என்ன?

பூச்சிகளைக் கொல்லும் வேதிப்பொருள்

38. பூச்சியுண்ணி என்றால் என்ன?

பூச்சி உண்ணும் விலங்கு, பல்லி.