பக்கம்:அறிவியல் வினா விடை-விலங்கியல்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

63


177. மூளைத் தண்டுவடப் பாய்மத்தின் நன்மை யாது?

மைய நரம்பு மண்டலத்தைத் தீங்கிலிருந்து காப்பது.

178. பெருமூளையின் சிறப்பு என்ன?

இது மூளையின் சிறந்த பகுதி. இதன் வேலைகள்
1. உடலின் வேலைகள் யாவற்றையும் ஒருமுகப்படுத்துதல்.
2. செயற்கை மறிவினையைக் கட்டுப்படுத்துவது.
3. அறிவுக் கூர்மைக்கும் நினைவற்றலுக்குக் காரணம்.

179. அறிவுக் கூர்மை மிகுதியாக இருக்க மூளை எப்படி இருக்க வேண்டும்?

மடிப்புகள் அதிகமுள்ளதாக இருக்க வேண்டும்.

180. யானையின் மூளை அதன் உடல் பருமனுக்கேற்பப் பெரிதாக உள்ளதா?

இல்லை. சிறியதாகவே உள்ளது.

181. முகுளத்தின் சிறப்பென்ன?

அடிமூளைப்பகுதி. இரைப்பை, நுரையீரல்கள் முதலிய உள்ளுறுப்புகளின் வேலைகளைக் கட்டுப்படுத்துவது.

182. தண்டுவடம் என்பது யாது?

முதுகெலும்பில் செல்லும் நாண். இதுவே அனிச்சைச் செயலின் நிலைக்களம்.

183. முப்படலங்கள் என்பவை யாவை?

மூளையையும் தண்டுவடத்தையும் மூடியுள்ள மூன்று படலங்கள்.
1. சிலந்திப் படலம்.
2. வன்படலம்.
3. இளம்படலம்.

184. முப்படல அழற்சி என்றால் என்ன?

முப்படல வீக்கம். நினைவுக் குறைவு, தலைவலி, குமட்டல் முதலியவை இதன் அறிகுறிகள்.

185. இயக்குவாய் என்றால் என்ன?

தசை, சுரப்பி அல்லது உறுப்பில் முடியும் இயக்க அல்லது சுரப்பு நரம்பு முனை.

186. நரம்பு என்றால் என்ன?

நாரிழையாகும். இது மூளை நரம்புகளையும், தாவர