இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
63
177. மூளைத் தண்டுவடப் பாய்மத்தின் நன்மை யாது?
- மைய நரம்பு மண்டலத்தைத் தீங்கிலிருந்து காப்பது.
178. பெருமூளையின் சிறப்பு என்ன?
- இது மூளையின் சிறந்த பகுதி. இதன் வேலைகள்
- 1. உடலின் வேலைகள் யாவற்றையும் ஒருமுகப்படுத்துதல்.
- 2. செயற்கை மறிவினையைக் கட்டுப்படுத்துவது.
- 3. அறிவுக் கூர்மைக்கும் நினைவற்றலுக்குக் காரணம்.
179. அறிவுக் கூர்மை மிகுதியாக இருக்க மூளை எப்படி இருக்க வேண்டும்?
- மடிப்புகள் அதிகமுள்ளதாக இருக்க வேண்டும்.
180. யானையின் மூளை அதன் உடல் பருமனுக்கேற்பப் பெரிதாக உள்ளதா?
- இல்லை. சிறியதாகவே உள்ளது.
181. முகுளத்தின் சிறப்பென்ன?
- அடிமூளைப்பகுதி. இரைப்பை, நுரையீரல்கள் முதலிய உள்ளுறுப்புகளின் வேலைகளைக் கட்டுப்படுத்துவது.
182. தண்டுவடம் என்பது யாது?
- முதுகெலும்பில் செல்லும் நாண். இதுவே அனிச்சைச் செயலின் நிலைக்களம்.
183. முப்படலங்கள் என்பவை யாவை?
- மூளையையும் தண்டுவடத்தையும் மூடியுள்ள மூன்று படலங்கள்.
- 1. சிலந்திப் படலம்.
- 2. வன்படலம்.
- 3. இளம்படலம்.
184. முப்படல அழற்சி என்றால் என்ன?
- முப்படல வீக்கம். நினைவுக் குறைவு, தலைவலி, குமட்டல் முதலியவை இதன் அறிகுறிகள்.
185. இயக்குவாய் என்றால் என்ன?
- தசை, சுரப்பி அல்லது உறுப்பில் முடியும் இயக்க அல்லது சுரப்பு நரம்பு முனை.
186. நரம்பு என்றால் என்ன?
நாரிழையாகும். இது மூளை நரம்புகளையும், தாவர