இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
விழித்திரையில் பார்வை நரம்பு நுழையும் புள்ளி. இப்புள்ளிக்கு ஒளியுணர்வு இல்லை.
311. அறை என்னும் சொல் எதைக் குறிக்கிறது?
- 1. புறச்செவி.
- 2. இதய அறை.
312. செவியின் சிறப்பென்ன?
- ஐம்பொறிகளில் சிறப்புள்ளது. பல செய்திகளைக் கேட்டு அறிந்து நாம் அறிவு பெற உதவுகிறது.
313. செவிப்பறையின் வேலை என்ன?
- நடுச் செவியில் அமைந்து ஒலி அதிர்வுகளைச் செவி நரம்புகளுக்கு அனுப்புகிறது.
314. நடுச்செவிக் குழலின் வேலை என்ன?
- செவிப்பறைக்கு இருபுறங்களிலும் காற்றழுத்தத்தைச் சரி செய்து சரியாகக் கேட்க உதவுகிறது.
315. நடுச்செவியிலுள்ள மூன்று சிற்றெலும்புகள் யாவை?
- சுத்தி எலும்பு, பட்டைச் சிற்றெலும்பு, அங்கவடி எலும்பு.
316. உட்செவியிலுள்ள இரு பகுதிகள் யாவை?
- 1. காது நத்தை எலும்பு கேட்டல்.
- 2. அரைவட்டக் குழல்கள் - உடலுக்கு நிலைப்பு அளித்தல்
317. நாம் ஒலியை எவ்வாறு உணர்கிறோம்?
- ஒலி அலைகள் நரம்புத் தூண்டல்களாக மாறச் செவி நரம்பு வழியாக மூளைக்குச் செல்லும்பொழுது நாம் ஒலியை உணர்கிறோம்.
318. கேள் நரம்பு என்றால் என்ன?
- செவிநரம்பு, முதுகெலும்புள்ள விலங்குகளின் உட்செவி யிலுள்ள 8 ஆம் மூளை நரம்பு. ஒலி அதிர்வுகளை மூளைக்கு தெரிவிப்பது.
319. செவிப்பறையின் வேலை என்ன?
- இது ஒலி அதிர்வுகளை உட்செவிக்குச் செலுத்துகிறது.
320. மயிர்ச்சிலிர்ப்பு எவ்வாறு ஏற்படுகிறது?
- தோல் தசை சுருங்குவதால் ஏற்படுகிறது.
321. மூக்கடிச்சதை என்பது என்ன?
மூக்கு, தொண்டை ஆகியவற்றிற்குப் பின் காணப்படும்