பக்கம்:அறிவியல் வினா விடை-விலங்கியல்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90


மருத்துவமனை, குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, ஊசி போடுதல் முதலியவற்றிற்கு அரசு ஏற்பாடு செய்து இவற்றை மேம்படச் செய்கிறது. தனி நல்வாழ்வும் வாழ்வு நலமும் இவற்றோடு பின்னிப் பிணைந்தவை.

2. இம்முறைகளால் மனிதன் வாழ்நாள் நீட்டித்துள்ளதா?

நீட்டித்துள்ளது. மனிதன் சராசரி வாழ்நாள் 60 என்று உயர்ந்துள்ளது. இறப்புவீதம் குறைந்துள்ளது.

3. சுசுமா டோனிகாவா செய்த அரும்பணி யாது?

மரபணுக்கள் சேர்ந்து எதிர்ப்புப் பொருள்களை உண்டாக்குகின்றன. இவை நிறப்புரியில் ஒன்றுக்கு மற்றொன்று நெருக்கமாக நகர்பவை என்று காட்டினார்.

4. பெனிசிலின் என்பது யாது? எதிலிருந்து இது தயாரிக்கப்படுகிறது?

முதல் உயிர் எதிர்ப்பு மருந்து. தொற்று நுண்ணங்களை அழிப்பது. பெனிசிலியும் நொட்டேட்டம் என்னும் பூஞ்சனத்திலிருந்து செய்யப்படுவது.

5. இதை யார் எப்பொழுது கண்டுபிடித்தார்?

1928இல் அலெக்சாண்டர் பிளமிங் கண்டுபிடித்தார்.

6. எர்னஸ்ட்செயின், ஹோவார்டு வால்டர் பிளார்க் ஆகிய இருவரும் செய்ய அருஞ்செயல் யாது?

1938இல் மருத்துவத்தில் பயன்படுவதற்காக பெனிசிலினை அதன் பூஞ்சனத்திலிருந்து பிரித்துத் துய்மைப்படுத்தினர். இதற்காக 1945இல் இவர்கள் நோபல் பரிசு பெற்றனர்.

7. ஸ்டெப்டோமைசினைக் கண்டறிந்தவர் யார்?

1944இல் செல்மன் வாக்ஸ்மன் கண்டறிந்தார்.

8. அழற்சி என்றால் என்ன?

காயம், நோய், தொற்றல், உறுத்தல் முதலியவற்றிற்குத் திசு உண்டாக்கும் பாதுகாப்புச் செயல். எ-டு தோலழற்சி, நுரையீரல் அழற்சி.

9. இதன் அறிகுறிகள் யாவை?

வீக்கம், சிவத்தல், அரிப்பு, வலி.

10. வெட்டுக்காயங்கள் என்பவை யாவை?