இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
91
- கத்தி, ஊசி, கூரிய தகடு முதலியவற்றால் ஏற்படும் கீறல்கள். புரை எதிர்ப்பு மருந்து தடவினால் போதும். எ-டு. அயோடக்ஸ் அல்லது அயோடின் கரைசல்.
11. புண்கள் என்றால் என்ன?
- தீ, வெப்பம், வேதிப்பொருள் முதலியவற்றால் தோல் திசுக்கள் தைவுறுதல். நோய்த் தொற்றல், அதிர்ச்சி, ஊட்டக்குறை முதலியவை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். புண் ஆழமாக இருந்தால், கட்டுப் போட வேண்டும்.
12. புண்களின் வகைகள் யாவை?
- 1. செம்புண்
- 2. கொப்புளப் புண்
- 3. தோல்நீங்குபுண்
- 4. தீப்புண்
13. நைவுப்புண் என்றால் என்ன?
- நோய், காயம், புண் ஆகியவற்றால் திசுக்களில் ஏற்படும் மாற்றம்.
14. கன்றிப்புகள் என்றால் என்ன?
- ஊமைக் காயங்கள், தோல் சிதையாமல் அதற்கடியிலுள்ள திசுக்களில் குருதி வெளிப்படுவதால் தோலின் நிறம் கருஞ்சிவப்பாதல்.
15. தும்மல் என்றால் என்ன?
- இச்செயலில் குரல்வளை திறந்திருக்கும். ஆழ்ந்த உள் மூச்சும் வலுவற்ற வெளிமூச்சும் இருக்கும். பாதி மூக்கு வழியாகவும் பாதி வாய்வழியாகவும் காற்று செல்லும். நெடி, நுண்கிருமிகள் முதலியவை இதற்குக் காரணிகள்.
16. குறட்டை விடுதல் என்றால் என்ன?
- உள்நாக்கு அதிர்வதால் இஃது உண்டாகிறது. உறங்கும் பொழுது வாயினால் மூச்சுவிடுவதால் இது நடை பெறுகிறது.
17. சுளுக்கு என்றால் என்ன?
ஓர் இணைப்பைச் சூழ்ந்துள்ள மென் திசுக்களுக்கு ஏற்படும் காயம். இதனால் நிறமாற்றம், வலி, வீக்கம்