இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
92
முதலியவை ஏற்படும். சுளுக்கு வழிக்கலாம். அல்லது வலி நீக்கியைத் தடவலாம்.
18. அடைகாலம் என்றால் என்ன?
- ஒரு நோய் வளர்ந்து அறிகுறிகள் தோன்றுவதற்குரிய காலம். இது சில நாட்களில் அமையும். எ-டு. நீர்க் கொள்ளல், காய்ச்சல், அம்மைவார்த்தல்.
19. காய்ச்சல் என்றால் என்ன?
- வெப்பத்தால் உடல் இயல்பான வெப்பநிலைக்கு மேல் உயருதல். ஒரு நோயின் அறிகுறி. அம்மை வருவதற்கு முன் கடும் காய்ச்சல் உண்டாகும். காய்ச்சல் முறைக் காய்ச்சல், நச்சுக் காய்ச்சல் எனப் பல வகைப்படும்.
20. வயிற்றுக்கடுப்பு என்றால் என்ன?
- வயிறு அளைந்து கொண்டு அடிக்கடி நீர்மமாக மலம் வெளியேறும் நிலை.
21. இது ஏற்படக் காரணம் என்ன?
- 1. எண்டமீபா.
- 2. வேதி உறுத்துபொருள்கள்.
22. வயிற்றுப்போக்கு என்றால் என்ன?
- மலம் நீர்மமாகச் செல்லுதல். இது வயிற்றுக் கோளாறு.
23. ஆக்டினோமைகோசிஸ் என்றால் என்ன?
- ஆக்டினோமைகோசிஸ் இஸ்ரேலி என்னும் குச்சிய உயிரியால் உண்டாகும் கால்நடை நோய்.
24. இந்நோயின் அறிகுறிகள் யாவை?
- நுரையீரல், தாடை, குடல் ஆகிய இடங்களில் நோய் தாக்கும். கட்டிகள் தோன்றிச் சீழ்வடியும். சீழில் கந்தகத் துணுக்குகள் இருக்கும்.
25. கொள்ளை நோய் (எபிடமிக்) என்றால் என்ன?
- பெருமளவில் பரவி அழிவை உண்டாக்குவது. எ-டு. காலரா.
26. இடநோய் (எண்டமிக்) என்றால் என்ன?
- எல்லாக் காலங்களில் ஓரினத்தில் குறிப்பிட்ட இடங்களில் உள்ளது. எ-டு. மலேரியா.
27. காலரா (கழிநோய்) என்றால் என்ன?