பக்கம்:அறிவியல் வினா விடை-வேதியியல்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

106


115. வெண்சவ்வீரம் என்றால் என்ன?

வெண்ணிறப்படிகம். நச்சுத்துண்டில்களில் பயன்படுவது.

116. கந்தகத்தின் சிறப்பு யாது?

குறைந்த உருகுநிலை கொண்ட அலோகம்.

117. இதன் மூன்று வேற்றுருக்கள் யாவை?

1.சாய்சதுரக் கந்தகம்.2. பட்டைக்கந்தகம்.3 களிக்கந்தகம்.

118. காந்தகத்தின் பயன்கள் யாவை?

தொற்றுநீக்கி, பூச்சிக் கொல்லி, கந்தக மருந்துகள் செய்வதில் பயன்படுதல்.

119. கந்தகமாக்கல் என்றால் என்ன?

ஒரு தனிமம் அல்லது கூட்டுப் பொருளைக் கந்தகத்தோடு சேர்த்தல்.

120. கந்தகக் காடியின் சிறப்பென்ன?

கனிமக் காடிகளில் மிகச் சிறந்தது. ஒரு நாட்டின் தொழில் வளத்தைக் காட்டுவது.

122. இது எம்முறையில் பெரிய அளவில் உண்டாக்கப்படுகிறது?

தொடுமுறையில்.

123. இதன் பயன்கள் யாவை?

நீர்நீக்கி ஆக்சிஜன் ஏற்றி உரங்கள் செய்யப் பயன்படுவது.

124. கந்தசக் காடியை எவ்வாறு பெறலாம்?

கந்தக மூவாக்சைடை நீரில் கரைத்துப் பெறலாம். ஒடுக்கி.

125. கந்தக மூவாக்சைடின் பயன்கள் யாவை?

கந்தகக்காடி தயாரிக்கவும் வளிகளை உலர்த்தவும் பயன்படுவது.

126. அயோடினின் பயன்கள் யாவை?

கருநிற ஊதாப்படிகம். வேதிப்பகுப்பிலும் மருத்துவத்திலும் பயன்படுவது. உணவில் அயோடின் ஊட்டங் குறையுமானால் தொண்டைக் கழலை உண்டாகும்.

127. அயோடோபென்பாசின் பயன் யாது?

சீரான மணமுள்ள நிறமற்ற படிகம். பூச்சிக்கொல்லி.

128. அயோடபாமின் பயன் யாது?

அயோடின் சேர்மம். குங்கும மனம். புரைத்தடுப்பான்.

129. களிமண் என்றால் என்ன?