பக்கம்:அறிவியல் வினா விடை-வேதியியல்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

37


57. நீர்நீக்கல் என்றால் என்ன?

ஒரு பொருளிலிருந்து நீரை வெளியேற்றுதல்.

58. நீர்த்தல் என்றால் என்ன?

சில படிககங்கள் நீரை ஈர்த்தல். எ-டு. கட்டசுண்ணாம்பு.

59. உருக்கல் என்றால் என்ன?

ஊதுலையில் ஓர் உலோகத்தை அதன் தாதுவிலிருந்து பிரித்தெடுத்தல். எ-டு. செம்பு அதன் தாதுவிலிருந்து பிரித்தெடுக்கப்படுதல்.

60. துத்தநாகம் பூசல் என்றால் என்ன?

காற்றில்லாமல் துத்தநாகத்தூளை வெப்பப்படுத்தி துத்தநாகப் பூச்சு பூசுதல், வில் சுருள்கள், திருகாணிகள் முதலியவை செய்வதில் இம்முறை பயன்படுதல். இப்பொருள்கள் அரிமானத்தடை உள்ளவை.

61. இம் முறையைப் புனைந்தவர் யார்?

ஷெராடு. ஆகவே இதற்கு ஷெராடைசிங் என்று பெயர்.

62. மாண்ட் முறை என்றால் என்ன?

தூய நிக்கலைப் பெறும் தொழிற்சாலை முறை.

63. பார்க் முறை என்றால் என்ன?

காரீயத்தைத் தூய்மையாக்கும் முறை.

64. பெசிமர் முறை என்பது யாது?

எஃகு தயாரிக்கும் முறை.

65. சீக்களர் முறை என்றால் என்ன?

உயரடர்த்தி பாலியீத்தின் தயாரிக்கும் தொழிற்சாலை முறை.

66. இம்முறையில் விளையூக்கிகள் யாவை?

டிட்டானியம் குளோரைடு, அலுமினியம் அல்கைல்கள்.

67. இதை அறிமுகப்படுத்தியவர் யார்?

ஜெர்மன் வேதியியலார் சீக்ளர் 1953இல் இதை அறிமுகப்படுத்தினர்.

68. சயனமைடு முறை என்றால் என்ன?

தங்கத்தை அதன் தாதுவிலிருந்து பிரிக்கும் முறை, இதில் பொட்டாசியம் சயனைடு கரைசல் பயன்படுத்தப்படுகிறது.