பக்கம்:அறிவியல் விருந்து.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

; க் அறிவியல் விருத்து காண்டுகட்குப்பிறகு அவற்றின் 50 அணுக்களே காணப் பேதும்; ஏனையவை சிதைந்து பிரித்தழித்துவிடும். அடுத்த 5,600 யாண்டுகளில் எஞ்சியுள்ள 50 அணுக்களில் பாதி-அஃதாவது 25 அணுக்கள்-சிதைந்து பிரிந்தழிகம். வெவ்வேறு கதிரியக்க ஓரிடத்தான்கள் வெவ்னேறு அரைவாழ்வினைப் பெற்றுள்ளன. எல்லாப் பொருள்களிலுமுள்ள கரி.14-இன் அளவு இன்னது என்பதை நாம் அறிவோம். இந்தக் கரியை அவை ஒரு குறிப்பிட்ட விகிதத்திலேயே இழந்து வருகின்றன. ஆகவே, பண்டைக் காலத்திய பொருள் களில் இப்பொழுது எவ்வளவு கரி-14 உள்ளது என்று சோதித்து அறிந்துகொண்டால் அந்தப் பொருள்கள் இவ்வளவு காலத்திற்கு முன்னால் இருந்தன என்று நம்மால் அவற்றின் காலத்தை அறுதியிட்டுக் கூறமுடியும் என்று டாக்டர் விப்பியின் மனத்தில் தோன்றியது. இந்தச் சிக்கலைத் தீர்ப்பதற்கு அவர் 1946-ஆம் பாண்டில் தீவிர மாக முனைந்தார். நாளடைவில் தம்முடைய கொள்கையை உண்மை என்று மெய்ப்பித்துவிட்டார். தரைமட்டத்தின் மீதுள்ள கதிரியக்கக் கரியில் என்ன மாற்றம் நேரிடுகின்றது? பொருத்தமான சூழ்நிலை ஏற் படுங்கால் சாதாரணக் கரியணுக்கள் காற்றிலுள்ள உயி சியத்துடன் கலந்து எரிந்து கார்பன்-டை-ஆக்ஸ்ைடு மூலக்கூறுகளையும்’ (எரிதல்' பூர்த்தியாகாத பொழுது ாைர்பன் மானாக்ஸைடு மூலக்கூறுகனையும்) உண்டாக்கு கின்றன. எடுத்து கோட்டாக, நாம் நிலக்கரியினை' எரிக் அம்பொழுது இதுதான் நேரிடுகின்றது; நிலக்கரியின் பெரும்பகுதி கரியினாலானது என்பதை நாம் அறிவோம், 33. உயிரியம்.Oxygen, 34. tipavēsa g-Molecule. 35. Griff;&-Combustion, 36. įstsv##ifi-Coal.