பக்கம்:அறிவியல் விருந்து.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#2. அறிவியல் விருந்து செய்வோர் உலர்ந்த நாடாவினைப் பற்றிக்கொண்டிருப்பு தாலும், பட்டும் ஒரளவு காப்புறையாதலாலும் மின்சாரம் தாய்வதினின்றும் காக்கப்பெறுவார். ஒருநாள் இடிமழை ஏற்பட்டபொழுது அக்காற்றாடி இ.வர்த்தப்பெற்றது. தம்முடைய விரற்கணுவைச் சாவி யிடம் வைத்து மின்பொறிகளைப் பெற்றார் ஃபிராங்க்லின், வேறு மின் கருவிகளைக் கொண்டு செய்த சோதனைகளை பும் அவர் இந்த மின்பொறிகளைக் கொண்டே செய்தார். ஆகவே, அவர் மின்னல் என்பது பேராற்றல் வாய்ந்த ஒரு மின்பொறியே ஆகும் என்ற முடிவிற்கு வந்தார். பெரும் புகழ் வாய்ந்த இந்தச் சோதனை நடைபெற்ற பொழுது ஃபிராங்க்லின் பல விபத்துக்குள்ளாக வேண்டியிருந்தது. ஆயினும், அவர், ஒரு கூடாரத்தினுள் இருந்துகொண்டு தாமும் தாம் பற்றியிருந்த பட்டு நாடாவும் நனையாத காது பாதுகாப்பு செய்து கொண்டார்." இந்தக் காற்றாடிச் சோதனையை மேற்கொண்ட வேறு பல ஆய்வாளர்கள் இந்த எளிய முன்னெச்சரிக்கையை மேற்கொன்னாததால் ப ல் வே று விடத்துக்குள்ளாகி மின்னலால் தாக்கவும் பெற்றனர். இத்தகைய பல சோதனைகளால் மின்னலைப்பற்றிய பல உண்மைகளை ஆம் அதனின்றும் உய்வதற்கான வழிகளையும் கண்டறிய முடித்தது. மின்னல் தாக்குவதால் வீடுகளோ மற்றக் கட்டடங் களோ தீப்பற்றி எரிந்தும் இடித்து விழுந்தும் பாழாகாத வண்ணம் பாதுகாக்கப்பெறும் சாதனத்தை 1752 கேயே அமைத்தார் ஃபிராங்க்லின். இஃது இடிதாங்கி" 13. நனைந்த பட்டில் மின்சாரம் காயும்; நமது உட தனைத்திருக்கும் பொழுது மின்சாரத்தை நன்கு கடத்தும். 14. Gorišš-lightning rod.