பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதையும் நீதியும் §3 கவிதைகளையும் .ெ த டு க் கி ன் ரு ன் . நம் நாட்டுக் காவியங்கள் யாவும் இந்த அடிப்படையிலேயே எழுந் தவை. நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் தமிழில் தோன்றிய தலைசிறந்த கவிதைகளில் ஒன்று. சிலம்பு காரணமாக எழுந்த அக் கதையை உலகோர் புகழும் பெருங்காப்பிய வடிவில் இளங்கோவடிகள் ஆக்கித் தந்துள்ளார். மூன்று பெரு நீதிகளை அடிப்படையாகக் கொண்டு நூல் இலங்குகின்றது. அரசியல் பிழைத்தோர்க் கறங்கூற் ருவதும் உரைசால் பத்தினிக் குயர்ந்தோர் ரத்தலும் ஊழ்வினை உருத்துவத் துர்ட்டும் என்பது உம் சூழ்வினை சிலம்பு காரண மாகச் சிலப்பதி காசம் என்னும் பெயரால் நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள். ' எனக் கூறி இளங்கோவடிகள் நூலைத் தொடங்கிஞர் என்று பதிகம் கூறுகின்றது. இவ்வறவுரைகளை நிலை நாட்ட இளங்கோ வடிகள் நூலைப் படைத்தாலும், அதைப் பயில்வாருக்கு இந்நீதி நினைவே தோன்று வதில்லை. இந் நீதிகளைக் கலை யுணர்ச்சியுடன் கலந்து கவிதையில் பின்னி விட்டார் அடிகள். வெறும் நீதியாக மட்டிலும் இருந்தால் படிப்போருக்கு அது வெறுப் பினையே விளைவிக்கும். நீதி கலைப் பண்புடன் சேர்ந்து விட்டதால் படிப்போர் அறியாமலேயே அஃது அவர் மனத்தில் புகுந்து அவர் வாழ்க்கையைச் செம்மைப் படுத்தி நிற்கின்றது. இது பல ஊட்டச் சத்துக்களை யுடைய வலிமை தரும் மருந்தினை (டானிக் உண்பது போலாகும். அதை உண்ணுங்கால் மருந்தினை உண்பது போன்ற உணர்ச்சி நம்மிடம் தோன்றுவதில்லை அல்லவா? 15 திசம்-வ 5-6)