பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிறித்தவர்களின் தமிழ்த் தொண்டு 151 இதிலும் குறைகள் இல்லாமல் இ ல் லை. அகராதி வேலைக்கு ஒருவரும் முற்றுப்புள்ளி இடமுடியாது. மொழி வளர்ச்சிக்குச் சொற்களின் வள ர் ச் சி ஒரு சிறந்த அறிகுறி என்று சொல்லலாம். சொற்கள் பெருகப் பெருக அகராதியின் வேலைக்கு முடிவே இராது. ஆகவே, சமயப்பணியாற்ற வேண்டிய மேட்ைடுக் கிறித்தவப் பெரியார்கள் தமிழ் மொழியின் பல்வேறு துறைகளில் பணியாற்றி நம் மொழியை வளமடையச் செய்தனர். இங்ங்ணம் வளமடையச் செய்தவர்களில் பல் வேறு நாட்டார் உளர். த த் து வ போ த க ச மி யு ம் வீரமாமுனிவரும் இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர்கள். எல்லிஸ் துரையும் போப்பையரும் ஆங்கில நாட்டினர். டாக்டர் கால்டு வெல் அயர்லாந்து நாட்டிலிருந்து வந்தவர். சீகன் பால்கு அய்யரும் இரேனியஸ் அய்யரும் செருமானிய நாட்டவர்கள். அரிகிருட்டினப்பிள்ளை, வேதநாயகம்பிள்ளை, வேதநாயக சாஸ்திரியார் நம் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள். எந்த நாட்டில் பிறந்தாலும், எந்த மொழியைப் பேசினலும் தமிழ்த் தொண்டாற்றிய பெரியார்களைத் தமிழர் என்று கொள்வதில் தடையிருக்க முடியுமா? சாதி, சமயம், நிறம் முதலிய எல்லைக்கோடுகள் மொழித்துறைக்கு வரைய முடியுமா? இந்த வேற்றுமை களையெல்லாம் தகர்த்தெறிந்து மக்களை இணைக்கும் ஆற்றல் பெற்றதல்லவா மொழி? தாம் இறந்த பிறகும் தமது க ல் ல ைற யி ல் , "போப்பையர்-ஒரு தமிழ் மாளுக்கர்” என்ற சொற்ருெடர் எழுதப்படல் வேண்டும் என்று கூறிய போப் ைப ய ரி ன் விருப்பம் இந்த உண்மையை விளக்குகின்றதல்லவா?