காணும் உண்மையைப் போன்ற தன்று; அவன் கூறும் உண்மை எப்படி யிருக்கவேண்டும் என்பதை உசைப்பது பெரும்பாலும் ஊழின் வலியை ஆங்காங்கு எடுத்துரைக்கும் தமிழ்க் கவிதைகள் படிப்போரது உள்ளத்தையே உ ரு க் கி விடும் : உயர்ந்த கவிதை யனுபவமும் ஏற்படச் செய்துவிடும். ஒரஞ்சு போருளால், அறந்த வாத உதிட்டான தியருசகக் கொடியோன் ஆதி காஞ்சு பதின்மருனர் தம்பி மார்கள் இங்கிதங்கள் அறிந்திடையே ஏவல் செய்யப் பாசஞ்சும் ஒருகுடைக்கீழ் நீயே ஆளும் பதமடைந்தும் விதிவலியால் பயன்பெ ருமல் காஞ்சு காதலத்தாய் அந்தோ, அந்தோ கடவுளர்தம் மாயையினுல் கழிவுற் ருயே. " (உசகம்-பாம்பு; கார்-மேகம்; கரதலம்-கை) திருமாலின் தரிசனம் பெற்ற கன்னன் தேர்மேல் இருக்கின்ருன் வைகத்து மன்னரெல்லாம் அவனைப் புடை சூழ இருக்கின்றனர். குருடன் மகன் அருகிருந்து சோகங் கூர்கின்ருன். அன்று மாலைக்குள் கொடையான் மிக்கோன் இறந்துபடுவதாக அசரீரி உரைக்கின்றது. இந்நிலையில் குந்தி தன் உளமுருகக் கண்ணிர் சோரக் குழல்சரியக் கோகோவென்று ஓடிவந்து கன்னன் மீது விழுந்து அழுகின்ருள். மேற்காட்டிய பாடல் அவள் புலம்பலை எடுத்துரைப்பது. பாரஞ்சும் ஒரு குடைக்கீழ் நீயே யாளும் பதமடைந்தும் என்ற தொடர் கன்னனது உயர்ந்த குடிவழிநிலையைக் காட்டுகின்றது. அவன் பிறப்பு சரியான காலத்தில் ஏற்பட்டிருக்குமாயின் இந்த அவனியெலாம் புரக்கும் அதிபனுக விளங்கி யிருப்பான்; சிறந்த தம்பியர்கள் யாவரும் (ஐவரும் நூற்றுவரும்) அவன் ஏவல் கேட்டு நிற்பர். விதி 18. வில்லிபாரதம்-பதினேழாம்போர் 255