பக்கம்:அறிவுக் கதைகள்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112


‘மாமா, நீரே வந்து எம் காலில் விழுந்தால்—ஏற்றுக் கொள்ளாமல் என்ன செய்வது?’—என்றார். (நான் தேடிப் போகவில்லை).

ஏதோ, தவறாகப் பேசிவிட்டோம் என்று தாங்கள் வருத்தப்பட்டு, எம் காலில் விழலாமா—அப்படி விழுந்தால், நான் என்ன செய்வது? (நீரே—தண்ணிரே; காலில் வாய்க்காவில்.)

எப்படி மாமன் மைத்துனர்! எப்படி தமிழ்!

71. காட்டாரும் பண்டிதமணியும்

‘ந.மு. வேங்கடசாமி நாட்டார் அவர்களும், பண்டித மணி கதிரேசஞ் செட்டியார் அவர்களும்,

திருச்சிக்கு மேற்கே, சொற்பொழிவாற்ற மாலை நேரத்தில் சென்றிருந்தனர்.

அங்கே, குளத்தங்கரையில், அனுட்டானம் செய்து கொண்டிருந்த நாட்டார் ஐயா அவர்கள்—பண்டிதமணி அவர்கள் (ஒரு கால் நடக்க விராது) தடியை ஊன்றி தட்டுத் தடுமாறி வருவதைப் பார்த்து, ‘ஐயா, கொஞ்சம் விழிப்பாக இருங்கள்; அவ்விடத்தில் ஒரு படி இல்லை’ என்று சொன்னார்.

அதற்குப் பண்டிதமணி சொன்னார் :

“தாங்கள் சிவப்பழம் ஆயிற்றே, இறைவன் இருக்கும் இடம் வந்தும்,

“எனக்குப் படியில்லை’ என்று சொல்லலாமா? என்று கேட்டார்,