பக்கம்:அறிவுக் கதைகள்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116


அங்கு இல்லை. வேட்டைக்குப் போயிருந்தார். மன்னர் திரும்பி வரும்வரை காத்திருந்த புலவர், அவர் வந்த பின்பு தாம் இயற்றிய கவிதையைப் பாடினார்.

'மரமது மரத்திலேறி மரமதைத் தோளில்வைத்து
மரமது மரத்தைக் கண்டு மரத்தினால் மரத்தைக்குத்தி
மரமது வழியே மீண்டு வன்மனைக் கேகும்போது

மரமதைக் கண்ட மாதர் மரமொடுமரம் எடுத்தார். அரசனும் கேட்டு மகிழ்ந்தான்.

பொருள் தெரியாமல் புலவர்கள் விழித்தனர். அரசனோ பெரும்பொருள் பரிசாக அளித்து, மரக்கவிப் புலவரை மரியாதை செய்து அனுப்பிவைத்தான்

பொருள் தெரியாமல் விழித்து, பொறாமையால் வெதும்பி நின்ற மற்றப் புலவர்களை அழைத்து, அவர்கள் அறியாமை நீங்க மரக்கவிப் புலவரின் பாட்டுக்கு அரசனே பொருளை விளக்கினான்.

மரமது மரத்திலேறி அரசன் குதிரை மீது ஏறி

(அரசமரம்—மா மரம்)

மரமது தோளில்வைத்து — தோமரத்தைத் தோளில் வைத்து

(தோமராயுதம்)

மரமது மரத்தைக் கண்டு — அரசன் வேங்கையைக் கண்டு

(வேங்கை மரம்

மரத்தினால் மரத்தைக் குத்தி—தோமரத்தால் வேங்கையைக் குத்தி

மரமது வழியே மீண்டு — அரசன் சென்ற வழியே திரும்பி