பக்கம்:அறிவுக் கதைகள்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130


மிகவும் தேவை என்பது அவரது கருத்து.

‘இடுக்கண் வருங்கால் நகுக’ என்பார் திருவள்ளுவர் நம் வாழ்வில் துன்பம் வரும்போதெல்லாம் இதனை

நினைவில் வைத்துக்கொள்வது நல்லது.


83. விலையேற்றம்

சிற்றூரிலே வாழும் குடியானவர் நகரத்திற்கு வருவார். என்னிடம் எல்லாச் சாமான்களும் விலையேறி விட்டதே என்று வருத்தப்படுவார். அவரிடம் நான் சொன்னேன்—

ஆம்,ஆம், யானை விலை குதிரை குதிரை விலை மாடு மாட்டின் விலை ஆடு ஆடு விலை கோழி கோழி விலை குஞ்சு குஞ்சு விலை முட்டை முட்டை விலை கத்தரிக்காய் ஆமாம் விற்கிறது—என்ன செய்வது? என்றேன்.

அதற்கு அவர், ஐயா, நீங்கள் சொன்னது சென்ற ஆண்டு விலை.

இப்பொழுது விற்பது— யானை விலை குதிரையல்ல மாடு; மாட்டு விலை ஆடல்ல கோழி” என்று சொல்லிக் கொண்டே போனார்.

‘எப்படி வாழ்வது’ என்று வருந்தினார். இதைக் கேட்கும் நமக்கும் விருத்தமாக இருக்கிறது—என்ன செய்வது?