பக்கம்:அறிவுக் கதைகள்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

139


அதற்குக் கீழே இருப்பவன் சொன்னான் “ஆணிக் கம்பெனிக்காரன் மீதும் தப்பில்லை, இந்த ஆணி எதிர்ச் சுவரில் அடிக்கிற ஆணி—” என்று கடைக்காரனிடம் கொடுத்துவிட்டு பின்பு நன்றாக சிந்தித்து போய்ச் “இந்த சுவருக்கான ஆணியை வாங்கிக்கொண்டு வா” என்று அனுப்பினான்.

எப்படி? குறுக்குவழிச் சிந்தனைகள் பலவற்றுக்கு இது ஒன்று போதுமானது.


90. ஒற்றுமைக்காக

ஒரு தென்னந் தோப்பைக் குத்தகைக்கு எடுத்தவன், ஒருமுறை நிறையத் தேங்காய்களைப் பறித்தான். மட்டையை உரித்தான். உரித்த மட்டைகளை விட்டிற்கு அனுப்பிவிட்டு, தேங்காய்களை விற்பனைக்காக சந்தைக்கு அனுப்பினான்.

தோப்பிலே எங்குப் பார்த்தாலும் ஒரே தேங்காய் நார்த் தூசியாகக் கிடந்தது.

மேல்தூசி, கீழ்தூசி இரண்டும் ஒன்றோடொன்று பேசிக்கொண்டது. ‘நாம் தேங்காயோடு இணைந்திருக்கும் போது துன்பமில்லை. இப்போது நம்மைப் பிரித்து விட்டார்கள், இப்படிச் சிதறிக் கிடக்கின்றோம்’ என்றது கீழ்தூசி.

அதற்கு மேல்துரசி “இது தோப்புக்காரன் தப்புமல்ல; குத்தகைக்காரன் தப்பும் அல்ல; நம் தப்புதான். நாம் சேர்ந்து வாழக் கற்றுக்கொண்டால் எல்லாம் சரியாகி விடும்."