பக்கம்:அறிவுக் கதைகள்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

150


எப்படிக் கதை நகைச்சுவையைக் காட்டுகிறது. இது நாட்டில் உள்ள சிலரின் நடைமுறைகளைக் காட்டுமே தவிர, நல்லறிஞர்களின் வாழ்வைக் காட்டாது. நேர்மையாக நடப்பது ‘மூடத்தனம்’ என்றும் ஆகாது.

“மனம்” செல்லும் இடமெல்லாம் செல்லாமல் தடுத்து நிறுத்தி, தீமையை உணர்த்தி, நல்லவழியில் மனத்தை செலுத்துவது எதுவோ, அது “அறிவு” என்பதும், இவன் “அறிஞன்” எனப்படுவான் என்பதும் வள்ளுவர் வாக்கு.


99. சங்ககால நூல்களில் ஒரு காட்சி

வெளியில் சென்றுவந்த ஒரு தாய், வெகுகாலமாகியும் திருமணமாகாதிருந்த தன் மகளை வீட்டில் காணாமல் தெருவில் ஒடி தேடியலைந்தாள். ஒரு வயது சென்ற கிழவர், “உன் மகள் தன் காதலனோடு இப்பொழுது தான் தென்புறச் சாலை வழியாகப் போனாள்” என்றார்.

அத் தாய் தென்புறச் சாலை நோக்கி விரைந்தோடி தேடினாள். நெடுந்தூரம் சென்றும் காணவில்லை. எதிரே ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து வந்தனர். அவர்களிடம் கேட்டாள், “என் மகள் ஒரு காளையோடு இவ்வழிச் செல்வதைக் கண்டீர்களா?” என்று.

வந்தவன் கூறினான், “ஆம் கண்டேன். திரண்ட தோள்களும், பரந்த மார்பும், விரிந்த நெற்றியும் உடைய ஒரு ஆண்மகன் செல்வதைக் கண்டேன்” என்று கூறி. “அயலே” என்று அருகிலுள்ள தன் மனைவியைப் பார்த்தான்.