பக்கம்:அறிவுக் கதைகள்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

151


அவள் கூறினாள். ஆம்! மயிலின் சாயலையுடைய அழகிய பெண்ணொருத்தி ஒரு ஆடவனுடன் செல்வதைக் கண்டேன்” என்று

என்ன பண்பு? ஆண், ஆணை மட்டுமே கண்டான். அருகில் சென்ற பெண்ணைக் காணவில்லை. பெண். பெண்ணை மட்டுமே கண்டாள். உடன் சென்ற ஆணைக் காணவில்லை.

அவர்களிடம் அத் தாய் கேட்டாள், “எவ்வளவு தூரத்தில் செல்லுகிறாள் விரைந்து சென்றால், அவளைக் கண்டுபிடிக்க முடியுமா? அவளைக் காணாமல் பெற்று வளர்த்த வயிறு பற்றி எரிகிறதே!” என்று அழுதாள்.

அவர்கள் கூறினார்கள், “வீணாக ஒடித் தேடியலையாதே அவர்கள் வாழத் துவங்கி விட்டார்கள். பக்குவம் அடையும் வரையில்தான் அவள் உனக்குச் சொந்தம். பக்குவமடைநது விட்டால், அவள் பிறருக்குச் சொந்தம். செந்தாமரை மலர் சேற்றில்தான் பிறக்கிறது. அது சேற்றிலேயே கிடந்தால், அது அழுகித்தானே போகும்? சேற்றைவிட்டு வெளியேறி மக்கள் முடியை அலங்கரிக்கும் போதுதானே அது பெருமைடைகிறது.

“முத்துக் கடலில்தான் பிறக்கிறது. கடலிலேயே கிடந்துவிட்டால் அதற்கு என்ன பெருமை? அது கடலை விட்டு வெளியேறி மன்னர்களின் முடியை அலங்கரிக்கும் போதுதானே அது பெருமையடைகிறது. திரும்பிக் செல்லுங்கள்” என ஆறுதல் கூறி அனுப்பிளைத்தார்கள்.

கதை நமக்கு ஒரு படிப்பினையை உண்டாக்குகிறது. அது, “இறக்கை முளைத்த பறவையை கூண்டில்