இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
22
- பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைக்கும்
- கேடுகெட்ட மானிடரே! கேளுங்கள்—கூடுவிட்டு
- ஆவிதான் போன பின்பு யாரே அனுபவிப்பர்
- பாவிகாள் அந்தப் பணம்!
என்ற ஒளவையாரின் வாக்கு எவ்வளவு உண்மையாயிற்று.
புதிதாகத் திருமணம் செய்து கொண்ட கணவனும், மனைவியும் ஒரு வேலையும் இல்லாதபோது வீண் பேச்சுக்களைப் பேசிக்கொண்டிருந்தனர்.
கணவன் சொன்னான் ‘நான் நாள்தோறும் பால் குடிக்க வேண்டும்’ என்று. மனைவி சொன்னாள்: ‘நல்ல யோசனை: ஒரு பசு வாங்கி விடுங்கள்.’
கணவர் : நேற்றே ஒரு பசு , மாட்டைப் பார்த்து வந்தேன். நாளைய தினம் போய் வாங்கி விடுவேன்.
மனைவி : மாடு வாங்கி வரும்போதே இரண்டு பித்தளைச்சொம்பும் வாங்கி வந்துவிடுங்கள்.
கணவர் : எதற்காக இரண்டு பித்தளைச் சொம்பு?
மனைவி : ஒன்று பால் கறக்க; மற்றொன்று எங்கம்மா வீட்டுக்குப் பால் அனுப்ப.
கணவர் : ஏண்டி! நான் பணம் போட்டு வாங்கும் மாட்டுப் பாலைக் கறந்து உங்க அம்மா வீட்டுக்கு அனுப்புவது எதற்காக?