97
விழாவுக்கு எதிர்பார்த்திருந்தது. மாவட்ட ஆட்சியாளர். மந்திரியைத் திறப்புவிழாவுக்கு அழைத்தார். அமைச்சரின்
செயலாளர் அப்போது ஊரில் இல்லை. வெளியூர்
போயிருந்தார். அதனால் என்ன?
அமைச்சர் நினைத்தார், நமக்குக் கட்டிடம் திறந்து வைக்கிற பழக்கம் இருக்கிறதே என மகிழ்ச்சி.
சிறைச்சாலைக் கட்டிடத் திறப்பு விழா —
அங்கே அந்நேரத்திற்கு வந்தார்; மேடை ஏறினார் . பேச ஆரம்பித்தார்;
“இது ஒரு நல்ல பணி. இம்மாதிரிக் கட்டிடங்கள் இன்னும் பல பெருக வேண்டும். பலபேர் விரும்பி இங்கு வந்து தங்கியிருக்க வேண்டும். மேலும் இது ஓங்கி வளர்க—"என்று பேசி முடித்தார்.
—அவ்வளவு தான்.
மாவட்ட ஆட்சியாளருக்கு, என்ன செய்வதென்றே” தெரியவில்லை.
அவரும் விழித்தார்; அமைச்சரும் விழித்தார்.
அன்று மாலை, ஊர் மக்கள் எல்லாரும் கூடினர்பேசினர்.
‘இது அமைச்சர் தவறல்ல —
அவருக்கு ஒட்டுப் போட்டவர்களின் தவறு.” —என்று கூறி விருத்தம் தெரிவித்துக் கொண்டனர்.