இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
1. அன்பு என்பதைப் போல் பொய்யும் புலையும் நிறைந்த மொழி வேறெதுவும் கிடையாது.
இப்ஸன்
2.உலகத்தில் மக்களிடம் அன்பு கொள்பவனே உண்மையில் வாழ்பவன் ஆவான்.
அந்தோணி
3. துன்புறுவோர்க்கு இரங்குக. துன்புறுவோர்க்கு இன்புறுவோர் செலுத்தவேண்டிய கடன் அதுவே.
போப்
4. அன்பு மூலமே எதையும் அறிய இயலும். அன்பின்றிப் பார்ப்பவன் இருளில் கண்களை இடுக்கிக் கஷ்டப்பட்டுப் பார்க்க முயலுகிறவன்.
மேட்டர்லிங்க்
5. வியப்பு புகழும், அன்பு ஊமையாயிருக்கும்.
போர்ன்
6. உண்மையான மனிதன் யாரையும் துவேஷிப்பதில்லை.
நெப்போலியன்