பக்கம்:அறிவுக் கனிகள்.pdf/130

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கனிகள்

127



703. அதிர்ஷ்டதேவதை அதிகமாக அருள் செய்யப்போகும் பொழுது பார்த்தால் அதிக பயங்கரமாகத் தோன்றுவாள்.

ஷேக்ஸ்பியர்


40. வறுமை

704. தான் செல்வன் என்று அறியாதவனே வறிஞன்.

பால் ரிச்சர்ட்

705. உலக உடைமைகளை ஒரு பொருளாக மதியாதவரே உண்மையான செல்வர்.

பால் ரிச்சர்ட்

706.வறிஞர் என்பவர் கொஞ்சமாக உடையவர் அல்லர். அதிகமாக ஆசைப்படுபவரே யாவர்.

ஆவ்பரி

707.வறுமையினும் பெருங்கேடுமில்லை; செல்வத்தினும் உயர்ந்த நன்மையுமில்லை.

கதே

708.வறுமையே தீமையிற் தீமையும், குற்றத்திற் கொடியதுமாகும்.

பெர்னார்ட்ஷா