பக்கம்:அறிவுக் கனிகள்.pdf/36

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கனிகள்

33


ஸாக்ரடீஸ்


150.தேவைகள் குறையும் அளவுக்கே தெய்வத்தன்மை அடைவோம்.

ஸாக்ரடீஸ்

151.பரிபூரணமே தேவரை அளக்கும் கோல். பரிபூரணத்தில் பற்றே மனிதரை அளக்கும் கோல்.

கதே

152.ஆன்ம எளிமை கண்டே ஆண்டவன் மகிழ்கிறான். எளிமைக் குணத்தைக் கண்டுதான் மகிழ்கிறான்; இறக்கும் குணத்தைக் கண்டன்று.

கதே

153. குழந்தை இயல்புடையவர்-அதாவது எளிதில் மகிழ்பவர், அன்பு செய்பவர், பிறர்க்கும் மகிழ்வூட்டுபவர். இவர்க்கே கடவுள் ராஜ்யம்.

ஆர். எல். ஸ்டீவன்ஸன்

154.கடவுள் பார்ப்பதைப் போல் எண்ணி மனிதரோடு வாழ்க; மனிதர் கேட்பதைப் போல் எண்ணிக் கடவுளோடு பேசுக.

ஸெனீகா

155.மனிதர் அறிய விரும்பாதது எதையும் கடவுளிடம் கேட்காதே. கடவுள் அறிய நீ விரும்பாதது எதையும் மனிதனிடம் கேட்காதே.

ஸெனீகா

156.வட்டத்தில் எந்தவிடத்திருந்தும் மத்திக்குச் செல்ல வழியுண்டு. எவ்வளவு பெருந் தவறானாலும் இறைவனிடம் செல்ல வழியுண்டு.

ரூக்கர்ட்