இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
46
அறிவுக்
229. தத்துவ ஞானம் எல்லாம் ஆச்சரியத்தில் ஆரம்பித்து, ஆச்சரியத்தில் முடிவடையும். முதல் ஆச்சரியம் அறியாமையின் குழந்தை; மற்ற ஆச்சரியம் வணக்கத்தின் தாய். முன்னது நமது அறிவின் பிரசவக் கஷ்டம் இறுதியானது அதன் சுகமரணம்.
கோல்ரிட்ஜ்
230.நுண்ணிய கருத்துக்கள் உடைமை மட்டுமே தத்துவ ஞானம் ஆகிவிடாது. அறிவு கூறும் வழி நிற்க ஆசை உடைமையே அதன் இலட்சணம்.
தோரோ
231.வாழும் முறையைக் கற்பிக்கும் வித்தையே தத்துவ ஞானம் தரும்.
ப்ளூட்டார்க்
232.உண்மையைக் காண்பதும் நல்வழியில் நடப்பதுமே தத்துவ ஞானத்தின் இரண்டு முக்கிய லட்சியங்கள்.
வால்டேர்
233.உண்மையான தத்துவ ஞானம், இல்லாததைச் சிருஷ்டிக்காது, உள்ளதையே நிரூபித்து உறுதி செய்யும்.
கலின்