பக்கம்:அறிவுக் கனிகள்.pdf/79

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

அறிவுக்



20. தனிமை

403.உயர்ந்த எண்ணங்களை உடையோர் ஒருபொழுதும் தன்னித்தவ ராகார்.

ஸ்ர்பிலிப் ஸிட்னி

404.கொள்கை உறுதியாயிருப்பின் தனிமையாயிருப்பது தனிமையாகாது.

அனர்பாஷ்

405.தன்னந் தனியாய் நிற்பவனைவிட அதிகச் சக்தி வாய்ந்தவன் உலகில் கிடையாது.

இப்ஸன்

406.உயர்ந்த எண்ணங்களின் தோழமை உடையோர் ஒருநாளும் தனிமை காண்பதிலர்.

பிலிப்


407.தனிமையாயிருக்கச் சக்தி இல்லாததினாலேயே சகல துன்பங்களும் விளைகின்றன.

லா புரூயர்

408.தனிமையாய் வாழ ஏன் நாம் அஞ்ச வேண்டும்? நாம் தன்னந் தனியாய் இறக்கத்தானே சர்வேச்வரனுடைய திருவுள்ளம்?

கெபிள்

409.தர்ம நெறி தவறியவரே தனியாயிருப்பவர்.

டைடெரெட்