பக்கம்:அறிவுநூல் திரட்டு-1.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரபந்தப் பகுதி. 69

(வேறு சந்தம்) மந்தமா ருதம் வளரும் மலை எங்கள் மலையே;

வடகலைதென் கலைபயிலும் மலையெங்கள் மலையே; கந்தவேள் விளையாடும் மலையெங்கள் மலையே;

கனகநவ மணிவிளையும் மலையெங்கள் மலையே; இந்தமா கிலம்புரக்கும் அங்கயற்கண் ணம்மை

இன்பமுறும் தென்பொதிய மலைஎங்கள் மலையே.()

குறத்தி தனது குல இயற்கை கூறுதல். கொழுங்கொடியின் விழுந்தவள்ளிக்

கிழங்குகல்லி எடுப்போம்; குறிஞ்சிமலர் தெரிந்துமுல்லைக்

கொடியில்வைத்துத் தொடுப்போம். பழம்பிழிந்த கொழுஞ்சாறும்

தேறலும்வாய் மடுப்போம்; பசுந்தழையும் மரவுரியும்

இசைந்திடவே உடுப்போம். செழுந்தினையும் நறுந்தேனும்

விருந்தருந்தக் கொடுப்போம்; சினவேங்கைப் புலித்தோலின்

பாயலிற்கண் படுப்போம். எழுந்துகயற் கணிகாலில்

விழுந்துவின கெடுப்போம்; எங்கள் குறக் குடிக்கடுத்த

இயல்பிதுகாண் அம்மே. 4) குறத்தி தன் குறிச்சி இயற்கை கூறுதல். புல்வாயின் பார்வையைவெம் புலிப்பார்வை யிணங்கும்

புதுத்தினால் உால்பாறை முன்றில்தொறும் உணங்கும்