பிரபந்தப் பகுதி. 69
(வேறு சந்தம்) மந்தமா ருதம் வளரும் மலை எங்கள் மலையே;
வடகலைதென் கலைபயிலும் மலையெங்கள் மலையே; கந்தவேள் விளையாடும் மலையெங்கள் மலையே;
கனகநவ மணிவிளையும் மலையெங்கள் மலையே; இந்தமா கிலம்புரக்கும் அங்கயற்கண் ணம்மை
இன்பமுறும் தென்பொதிய மலைஎங்கள் மலையே.()
குறத்தி தனது குல இயற்கை கூறுதல். கொழுங்கொடியின் விழுந்தவள்ளிக்
கிழங்குகல்லி எடுப்போம்; குறிஞ்சிமலர் தெரிந்துமுல்லைக்
கொடியில்வைத்துத் தொடுப்போம். பழம்பிழிந்த கொழுஞ்சாறும்
தேறலும்வாய் மடுப்போம்; பசுந்தழையும் மரவுரியும்
இசைந்திடவே உடுப்போம். செழுந்தினையும் நறுந்தேனும்
விருந்தருந்தக் கொடுப்போம்; சினவேங்கைப் புலித்தோலின்
பாயலிற்கண் படுப்போம். எழுந்துகயற் கணிகாலில்
விழுந்துவின கெடுப்போம்; எங்கள் குறக் குடிக்கடுத்த
இயல்பிதுகாண் அம்மே. 4) குறத்தி தன் குறிச்சி இயற்கை கூறுதல். புல்வாயின் பார்வையைவெம் புலிப்பார்வை யிணங்கும்
புதுத்தினால் உால்பாறை முன்றில்தொறும் உணங்கும்