பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 அறிவுநூல் திரட்.ே

W. சரிதைப் பகுதி. 1. நைடதம்.

நைடதம் வடமொழியிலுள்ள பஞ்சகாவ்யங்களுள் ஒன்று. வடமொழியில் இதனையியற்றியவர் பூரீஹர்ஷதேவன் என்னும் அாசர் பெருந்தகை. கிஷததேசத்தாசனை களனது சரித்திாத் தைக் கூறுதலால் இஃது இப்பெயர் பெற்றது. தத்திதாக்க நர்மம், நைஷதம் என்னும் வடமொழிப் பெயர் தமிழில் நைடதம் என ஆயிற்று. வடமொழி நைடதத்தையும் தமிழிலுள்ள நளவெண்பா வையும் முதனூலாகக் கொண்டு இந்நூலே இப்பெயரோடு செய்த வர் அதிவீாாாமபாண்டியன் என்னும் இயற்பெயர் வாய்ந்த பாண்டி யர்குலத்து அரசாாவர். இவர்க்குச் சிவலன் வாராமன் என்ற பெயர் களும் வழங்கும். இவர் தென்காசியில் இருந்து, அரசு செய்தவர். இவரது தந்தை குலசேகரபாண்டியன். இவர் முடிசூடிய காலம் கி.பி.1562-என்று சாசனங்களால் அறியப்படுகிறது. இவரது பாடல்களால் இவர்மதம் சைவம் என்பது.தெளிவு. -

இவர் இயற்றிய ஏனைய தமிழ் நூல்கள் இலிங்கபுராணம், கூர்ம புராணம், காசி காண்டம், நறுக்தொகை, கருவை அந்தாதிகள் முதலியன. இவரது தமையன் வாதுங்காாமபாண்டியன் என் பாரும் சிறந்த தமிழ்ப்புலமை வாய்ந்திருந்தவர். அவர் பாடியது, பிரமோத்தி காண்டம். கருவ்ையந்தாதிகளையும் அவரே பாடினர் என்பது சிலாது கொள்கை.

அதிவீரராமபாண்டியன் வாக்கு வெண்மையும் வன்மையுமின் றிச் செம்பாகமானது. ஒரு பொருளுக்கு அடைமொழிகளை அணி அணியாய் அடுக்கிக் கூறுவது இவரியல்பு. சிந்தாமணி, கம்பாாமா யணம் முதலிய காவ்யங்களினின்றும் சங்கநூல்களினின்றும் நய மான தொடர்களையும் கருத்துக்களையும் தம்முடைய பாடல்களில் அங்கங்கே அமைத்துக் கொள்வர். தமிழ் இலக்கிய அறிவு பெற விரும்புவோர் இந்துள்லே முதற்கண் விரும்பிக்கற்றல் மரபு. இந்து லில் காவ்யாசம் மலிந்திருக்கின்றன. "நைடதம் புலவர்க் கெளட தம்’ என்ற பழமொழியால் இந்நூலின் பெருமை விளங்கும். நளன்