பக்கம்:அறுபத்து மூவர் துதிப்பா.pdf/21

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
14

38. கூற்றுவ நாயனார்

மாற்றலர் பலரை வென்று முடிசூட வேண்டி
வளர் தில்லை அந்த ணரையே
ஆற்றவும் வேண்டி நின்றும் அவரே மறுக்க
அயர்வுற்ற அந்த அமயம்

    • ஏற்றவர் கனவில் நல்கு* பதமே முடித்த

இசையோடும் ஆட்சி அதுசெய்
கூற்றுவ நாயனாரின் அடியே பணிந்து
குணமே உரைத்து மகிழ்வாம்.

{[gap}}

39. புகழ்ச்சோழ நாயனார்

{{gap}]

மாமலர் சிக்கிய யானையை வாட்டிய
வாளார் சீரார் எறிபத்தர்
தோமிலர் என்றறி ஞானமி குந்தவர்
சூழ்போர் பட்டோர் தலைக்கண்ணே
பூமரு புன்சடை கண்டு ககுலைதெரி
புக்கே மிக்கோர் புகழ்ச் சோழர்
நாமமென் நாவினில் ஆசையொ டேசொலும்
நன்னுள் எந்நாள் என்பேன் நான்.

{[gap}}

40. நரசிங்க முனையரைய நாயனார்

புனைவர் இங்கிவர் காமக் குறிகளே என்றே
அயலினர் புறம் போகத்
தினையும் அருவருப் பில்லேன் இவரொரு
திருநீ றணிதரு தேகத்தர்


** ஏற்றவர்= விடையேறி சிவன் : *பதம்=திருவடி