உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அற்புதத் திருவந்தாதி.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

83

ஓருடம் பினராயிருத்தற்குரிய காரணத்தைச் சொல்வாயக) எ - று,

இறைவனாகிய நீயோ, வேண்டுதல் வேண்டாமை யிலானாதலால் நினது விருப்பத்தால் உமாதேவியாரை ஒரு பாகத்திற் கொண்டுள்ளாய் எனக் கூறுதற்கு இடமில்லை. இனி உமாதேவியாராகிய அவ்வம்மையாரோ, வானளலோங்கிய வளமார்ந்த மலை முழுவதையும் தனக்கே யுரிமையாகக் கொண்டு ஆட்சி புரியும் மலையரசனுக்குத் திருமகளர்கத் தோன்றித் தன் தந்தையின் அரசுரிமையை ஏற்று நடத்த வல்ல பேராற்றலும் நிலப் பரப்பும் ஒருங்குடையாராதலால் அச்சத்தாலோ வேறு இடமின்றியோ நின் ஒரு பாகத்தில் ஒன்றிவாழ்கின்றார் எனக் கருதுதற்கும் இடமில்லை. எனவே பிறிது காரணமின்மையின் நீவிர் இருவீரும் தீயின் வெம்மையும் நீரின் தண்மையும் போன்று பிரிப்பின்றி அம்மையப்பரென ஒருவராய்த் திகழ்வதே நும்மிருவர்க்குந் தொன்று தொட்டுளதாம் தொன்மை யியல்பெனவே யாம் கொள்வோம் என்பது கருத்து. வினாவாய் வந்த ஓகாரம் மூன்றும் குறிப்பினால் எதிர் மறைப்பொருளைத் தந்து நின்றன.

அவளோர் குலமங்கை பாகத்தகலாள்
இவளோர் சலமகளுமீதே — தவள நீ
றென்பணிவீ ரென்றும் பிரிந்தறியீர் ஈங்கிவருள்
அன்பணியார் சொல்லுமினிங் கார் (95)

இ-ள்: வெள்ளிய திருநீற்றினையும் எலும்பு மாலையையும் அணிந்தருளிய இறைவரே, ஒப்பற்ற உயர்குடியிற்ருேன்றிய மலைமகளாராகிய அவரோ நுமது இடப்பாகத்தினின்றும் பிரியாதுள்ளார். இங்ஙனமே நீருருவாகிய கங்கை நங்கையும் நும் திருமுடியினின்றும்