பக்கம்:அற்புதத் திருவந்தாதி.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உ சிவமயம் திருச்சிற்றம்பலம். உரத்தூர், சிவபூசைச் செல்வர் குஞ்சித பாதம் பிள்ளை அவர்களின் மணிவிழா வ ழ் த் து ப் ப ஞ் ச ர த் தி ன ம் " பொன்னம் பலத்தின் மேற்பாலாம் பொன்னங் கோயிற் பழங்குடியின் மன்னும் வேளாண் குலமரபன் ; வாழ்கோத் திரவஞ் சரமுடையான் ; பன்னும் அரங்க நாதன் பால், பராவு சுப்ர மணியனவன், பின்னோன் சீனி வாசனெனப், பிறங்கும் இருவர் பிறந்தனரே.” " மூத்தோன் சுப்பிர மணியனவன், முத்தீக் கையுமுறை பெற்றரனை ஏத்தும் பூசை செய்பலனால் எழில்சேர் சிவசி தம்பரமும் கூத்தன் அருளார் சுந்தரமும் குலவப் பிறந்தார் இளையவற்கே பூத்தார், முத்துக் குமரானொடும் புலவர் குஞ்சித பாதமுமே.” " உரத்தூர் வாழ்சிவ சிதம்பரனும் உத்த மற்கே யபிமானன் ;