உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அற்புதத் திருவந்தாதி.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

19

விளங்குபவன். அவனே நிலம், நீர், காற்று என்னும் இவையாகவும் நிற்பவன். ஆன்மாவாகியும் (இருசுடர் முதல் உயிர் ஈறாக இங்ஙனம் எண்ணப்பட்ட) எண் வகைப்பொருள்களையும், திருமேனிகளாகக்கொண்டும் ஞானமேதிரு மேனியாகத் திகழ்பவனாகி (அன்பர்க்கு) எளிவந்து அருள்செய்து நிற்பவனும் அவ்விறைவனே எ-று.

இயமானன்-ஆன்மா. ஞானமயனாகிய தனது உண்மைத் திருமேனியே யன்றி இருசுடர் முதலாக வுள்ள இவற்றையும் திருமேனிகளாக வுடையான் என்பது கருத்த கலின் 'அட்டமூர்த்தியுமாய்' என்புழி உம்மை எச்சப்பொருளாதாய் நின்றது. ஞானமயனாகி வந்து நின்றானும் அவனே என இயைத்துரைக்க. இதன்கண் இருசுடர் முதலிய எட்டும்சொல்லி, மேலும் அட்டமூர்த்தியுமாய் என்றது, அவ்வெட்டினையும் இயக்கும் மூர்த்திகள் எட்டாதல் பற்றியென்றும், இயமானனாய் அட்டமூர்த்தியுமாய் என்றதனால் இவ்வெட்டினும் அதிட்டித்து (இயக்கி) நிற்றலேயன்றி அவ்வெட்டினும் வியாபித்து (விரவி)நிற்கும் முறைமை யினும் கூறியவாறென்றும், இவ்வெட்டும் சகளம்- ஞானமயன் என்றது நிட்களம் என்றும் விளக்கங் கூறுவர் பெரியோர்.

வந்திதனைக் கொள்வதே யொக்குமிவ் வாளரவின்
சிந்தை யதுதெரிந்து காண்மினோ —வந்தோர்
இரானை நீ ரிருண்டனைய கண்டத்தீர் எங்கள்
பிரானீருஞ் சென்னிப் பிறை. (22)

இ.ள். இரவுப்பொழுதானது ஒரு வடிவு கொண்டு வந்து நீரின் தன்மை யுடையதாய் இருண்டு