உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அற்புதத் திருவந்தாதி.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

விளங்கினாலொத்த திருமிடற்றை யுடையீர், எங்கள் பெருமானாக விளங்குபவரே, இந்த ஒளிபொருந்திய பரம்பின் எண்ணமானது, நுமது சடைமுடியில் அணியப்பெற்ற பிறைச்சந்திரனாகிய இதனை யணுகி வந்து பற்றிக் கொள்வதேபோல் தோன்றுகின்றது. (பாம்பினால் வரும்) அத்தீங்கினை முன்னரே கண்டறிந்து பரிகரிப்பீராக. எ-று

ஓர் இரா வந்து நீருடன் இருண்டனைய கண்டத்தீர் என்க. இனி, நீர் என்ற சொல் ஆகுபெயராய் மேகத்தையுணர்த்திய தெனக்கொண்டு, ‘மேகமானது இராப்பொழுதை யொத்து இருண்டு தோன்றினா லொத்த கண்டத்தையுடையீர்’ எனப்பொருள் கூறுதலுண்டு. இவ்வாளரவின் சிந்தை, உம் சென்னிப் பிறையாகிய இதனை வந்து கொள்வதே ஒக்கும், அது தெரிந்து காண்மினோ எனக் கூட்டிப்பொருள் கொள்க.

பிறையும் புனலும் அனலரவுஞ் சூடும்
இறைவர் எமக்கிரங்கா ரேனும் — கறைமிடற்ற
எந்தையார்க் காட்பட்டேம் என்றென் றிருக்குமே
யெந்தையா வுள்ள மிது. (28)

இ-ள் பிறைச்சந்திரனையும் கங்கைப் பெரு வெள்ளத்தையும் நெருப்புண்டாக உயிர்த்துச் சீறும் பாம்பினையும்முடிமேலணிந்த இறைவர் எம்பொருட்டுச் சிறிதும் மனமிரங்காராயினும் எமது பொத்தப்படாத நெஞ்சமாகிய இது, எந்தையாராகிய அவர்க்கு ஆட்பட்டோம் என்று பெரு மகிழ்ச்சியுற்றிருக்கும். எ-று

அனல் அரவு - அனல் பட உயிர்த்துச் சீறும் பாம்பு. ‘பிறையும் அனலரவும் சூடும் இறைவர்’ என்றது